நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்சியானுக்கு புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானமும் KLIAவிற்கு திரும்பியது

சிப்பாங்:

தென் கொரியா  இன்சியான் விமான நிலையத்திற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை  மீண்டும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து திரும்பியது.

ஏர்பஸ் ஏ330-323 விமானம் இன்று காலை 12.01 மணிக்கு  கேஎல்ஐஏவில் இருந்து புறப்பட்டு ஒரு சில மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

தென் கொரியாவுக்கு புறப்பட்டு மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பிய இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

முன்னதாக எம்எச்66 விமானமும் இதே போன்று புறப்பட்டு மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பியது.

இச் சம்பவங்கள் குறித்து மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset