நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி வளாகங்களில் வேக கட்டுப்பாட்டை 30 கிலோ மீட்டராக குறைக்க அரசாங்கம் எண்ணம்: அஹ்மத் ஸாஹித்

புத்ராஜெயா: 

பள்ளிக்கூடம், பள்ளிக்கூட வளாகங்களில் வேக கட்டுப்பாட்டை 30 கிலோ மீட்டராக குறைக்க அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதாக துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார். 

பயங்கரமாக வாகனத்தைச் செலுத்துதல், விபத்தை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் எனும் உலக சுகாதார நிறுவனத்தின் அழைப்பினை ஏற்று இந்த முன்மொழிவு கொண்டு வரப்பட்டது என்று அவர் தெரிவித்தார். 

வேக கட்டுப்பாட்டு நிர்வகிப்பு திட்டத்தை அமல்படுத்த சம்பந்த தரப்புகளுடன் மத்திய அரசாங்கம் ஒத்துழைப்பு நல்கும் என்று புறநகர், வட்டார மேம்பாட்டு துறை அமைச்சருமான அவர் குறிப்பிட்டார் 

ஒருவேளையில் இந்த திட்டம் நேர்மறையான முடிவுகளை ஏற்டுத்தினால் இந்த வேக கட்டுப்பாடு நகரங்களிலும் கொண்டு வரப்படலாம். இதனால் சாலை விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்று அவர் சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset