நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அமெரிக்கப் பொது டென்னிஸ் தொடரிலிருந்து நோவாக் ஜோக்கோவிச் வெளியேறினார்

வாஷிங்டன்: 

அமெரிக்க பொது டென்னிஸ் தொடரின் 3-ஆவது சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச் 28-ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலேக்சி பாபிரினை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் ஜோகோவிச் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அலேக்சி பாபிரின் முதல் செட்டை 6-4, 2-ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றி ஆட்டத்தைத் தன் வசமாக்கினார்.

இருப்பினும், 3-ஆவது செட்டை ஜோகோவிச் சிறப்பாக விளையாடி 6-2 என்றப் புள்ளியில் கைப்பற்றினார்.

ஆனால் ஜோகோவிச் 4-ஆவது செட்டை 4-6 என இழக்க, 6-4, 6-4, 2-6, 6-4 என தோல்வியடைந்து அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியிலிருந்து வெளியேறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset