நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கூட்டரசுப் பிரதேசத்தை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கிண்ண கால்பந்து போட்டி

கோலாலம்பூர் -

கூட்டரசுப் பிரதேசத்தை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கிண்ண கால்பந்து போட்டி நடத்தப்படும்.

மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் விளையாட்டுப் பிரிவுத் தலைவருமான அண்ட்ரூ டேவிட் கூறினார்.

கூட்டரசுப் பிரதேச மஇகாவினர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்காக கூடைப்பந்து, கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.

வலைப்பந்து போட்டி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கால்பந்துப் போட்டி செம்படம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் கலந்து கொள்ளவுள்ளது.

கட்சியின் தேசியத் தலைவரின் ஆலோசனையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்போட்டிகள் நடத்தப்படும்.

இதன் மூலம் சிறந்த விளையாட்டாளர்களை நாம் அடையாளம் காண முடியும்.

குறிப்பாக தேசிய ரீதியிலான போட்டியாளர்களை உருவாக்குவது தான் மஇகாவின் இலக்கு என்று அண்ட்ரூ டேவிட் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset