நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

1000 கோல்களை அடிப்பேன்: ஓய்வுக்கு முந்தைய  இலக்கை அறிவித்தார் ரொனால்டோ

ரியாத்:

கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு தான் அடைய ஆசைப்படும் லட்சிய இலக்கை வெளிப்படுத்தியுள்ளார். 

போர்த்துகல், அல் நசர் ஆகிய அணிகளிம் நட்சத்திர வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ தனது கால்பந்து பயணத்தில் 900 கோல்கள் என்ற மாபெரும் சாதனைக்கு மிக அருகில் உள்ளார்.

தற்போது 899 கோல்கள் அடைந்துள்ள அவர், தனது அடுத்த இலக்கான 1,000 கோல்களை அடைய மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியில் முன்னாள் சக வீரர் ரியோ பெர்டினாண்டுடன்அவர் அளித்த பேட்டியில், 

இந்த உயரிய இலக்கை அடைய விரும்புவதாக ரொனால்டோ கூறினார்.

நான் 1,000 கோல்கள் அடைய விரும்புகிறேன். எனது  41 வயதிற்கு முன்னர் இந்த இலக்கை அடையலாம்.

எனது காயங்களை தவிர்க்க வேண்டும் என்பதே இந்த இலக்கை அடைவதற்கான முக்கியமான பகுதியாக இருக்கும் என்றும், 

900 கோல்கள் ஒரு முக்கியமான கட்டமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset