நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2026-ஆம் ஆண்டுக்கான சுக்மா போட்டியைச் சிலாங்கூர் ஏற்று நடத்தவுள்ளது

ஷா ஆலம்: 

2026-ஆம் ஆண்டுக்கான சுக்மா விளையாட்டுப் போட்டியைச் சிலாங்கூர் மாநிலம் ஏற்று நடத்தும் என்று மலேசிய விளையாட்டு உச்சமன்றம் முடிவு செய்துள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோ தலைமையில் புக்கிட் ஜலில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டதாகத் தேசிய விளையாட்டு மன்றம் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

சுக்மா விளையாட்டுப் போட்டி சுழற்சி முறை தேசிய விளையாட்டு மன்றத்திற்கும்  மாநிலத்திற்குமிடையே இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி அமைக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் 2026-ஆம் ஆண்டுக்கான சுக்மா விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தப்பட்டதை ஒருமனதாக உறுதிப்படுத்தியது. 

அதனை தொடர்ந்து,  2028-ஆம் ஆண்டுக்கான சுக்மா விளையாட்டுப் போட்டியைக் கிளாந்தான் ஏற்று நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (KBS) மாநிலங்களுக்கு சிறந்த விளையாட்டு வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும்.

நாடு முழுவதிலுமிருந்து வருகை புரியும் இளைஞர் விளையாட்டு வீரர்களுக்கான தரமான போட்டித் தளமாக சுக்மா விளையாட்டுகள் இருப்பதை எப்போதும் உறுதிசெய்யுமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset