செய்திகள் விளையாட்டு
உருகுவே வீரர் மரணம்: கால்பந்து அரங்கில் சோகம்
சாவ் பாலோ:
போட்டியின் போது மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே கால்பந்து வீரர் ஜுவான் இஸ்கியர்டோ மரணமடைந்தார்.
பிரேசிலில் நடந்த கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து சுற்று 16 போட்டியில் பிரேசிலின் சாவ் பாலோ அணி 2-0 என உருகுவேயின் நேஷனல் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியின் 84ஆவது நிமிடத்தில் நேஷனல் அணியின் உருகுவே வீரர் ஜுவான் இஸ்கியர்டோ 27, மைதானத்தில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக இவர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜுவான் இஸ்கியர்டோ, ஐந்து நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஒழுங்கற்ற இதயதுடிப்பால் மயங்கி விழுந்த இவருக்கு கார்டியோரெஸ்பிரேட்டரி அரஸ்ட் உடன் தொடர்புடைய கார்டியாக் அரித்மியா ஏற்பட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2024, 8:42 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
September 18, 2024, 8:40 am
கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டி: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்
September 17, 2024, 4:57 pm
சீன பொது பூப்பந்து போட்டியில் தேசிய இணையர் அதிரடி வெற்றி
September 16, 2024, 11:11 am
ஹாங்காங் பொது பூப்பந்துப் போட்டி: பியெர்லி தான் - தீனா சாம்பியன்
September 16, 2024, 11:06 am
லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா அபாரம்
September 16, 2024, 10:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2024, 11:18 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
September 14, 2024, 8:49 am
பண்டேஸ் லீகா கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் வெற்றி
September 14, 2024, 8:46 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சமநிலை
September 13, 2024, 8:44 am