நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உருகுவே வீரர் மரணம்: கால்பந்து அரங்கில் சோகம்

சாவ் பாலோ:

போட்டியின் போது மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே கால்பந்து வீரர் ஜுவான் இஸ்கியர்டோ மரணமடைந்தார்.

பிரேசிலில் நடந்த கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து சுற்று 16 போட்டியில் பிரேசிலின் சாவ் பாலோ அணி 2-0 என உருகுவேயின் நேஷனல் அணியை வீழ்த்தியது. 

இப்போட்டியின் 84ஆவது நிமிடத்தில் நேஷனல் அணியின் உருகுவே வீரர் ஜுவான் இஸ்கியர்டோ 27, மைதானத்தில் மயங்கி விழுந்தார். 

உடனடியாக இவர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜுவான் இஸ்கியர்டோ, ஐந்து நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

ஒழுங்கற்ற இதயதுடிப்பால் மயங்கி விழுந்த இவருக்கு கார்டியோரெஸ்பிரேட்டரி அரஸ்ட் உடன் தொடர்புடைய கார்டியாக் அரித்மியா ஏற்பட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset