நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலக சாதனை படைக்க போகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 

ரியாத்:

கால்பந்து போட்டி என்று எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு முதலில் வருவது கிறிஸ்டியானோ ரொனால்டோ தான். 

இவரை கால்பந்து ஜாம்பவான் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். 

போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த இவர்  உலக அளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது. 

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஓபன் செய்த நிலையில், மிக விரைவில் ஃபாலோயர்கள் வாங்கி பிரபலமாகியுள்ளார். 

இவர் பல போட்டிகளில் வென்று சாதனை படைத்து இருந்தாலும் கூட, ரொனால்டோ கால்பந்து உலகக் கிண்ணத்தை தனது அணிக்காக வெல்லவில்லை என்று ஒரு பேச்சு இருந்து வருகிறது.

மேலும் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று கூறி இருந்தார். 

இந்நிலையில் சவூதி  புரோ லீக் அணிக்கு எதிராக அவர் அடித்த ஒரு  கோலின் மூலம் 899 கோல்கள் அடித்துள்ளார்.

எனவே விரைவில் கால்பந்து உலகில் 900 கோல்கள் அடிக்கும் முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைக்க இருக்கிறார். 

இன்னும் ஒரே ஒரு கோல் அடித்தால் கால்பந்து உலகில் யாருமே படைக்காத சாதனையை அவர் படைக்க உள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset