செய்திகள் ASEAN Malaysia 2025
வளமான பிராந்தியத்தை உறுதிப்படுத்த ஆசியான் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
அமைதியான, நிலையான, வளமான பிராந்தியத்தை உறுதி செய்ய ஆசியான் உறுப்பு நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 57-ஆவது ஆசியான் தின வாழ்த்து தெரிவித்தார்.
அமைதியான, நிலையான, செழிப்பான பிராந்தியத்தை உறுதி செய்வதற்காக நாம் ஒன்றாக நின்று செயல்பட வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் ஆசியான் தினம் கொண்டாடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் மலேசியா அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
ஆசியான் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், சிறந்த எதிர்காலத்தை நோக்கி ஒன்றாக இணைந்து செயல்படவும் தொடரும் என நம்புவதாக அன்வார் கூறினார்.
ஆசியான் தினம் என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அதன் 10 உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் வளர்க்கும் பிராந்திய அரசுகளுக்கிடையேயான அமைப்பான பிளாக் நிறுவப்பட்டதன் வருடாந்திர நினைவுநாள் ஆகும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
