
செய்திகள் மலேசியா
மக்கோத்தா சட்டமன்றம் காலியானதாக மலேசியத் தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்கப்பட்டுவிட்டது
கோலாலம்பூர்:
மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஷரிஃபா அஸிஸா உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து மக்கோத்தா சட்டமன்றம் காலியானதாக மலேசியத் தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்கப்பட்டு விட்டதாக ஜொகூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ டாக்டர் முஹம்மத் புவாட் ஷர்காஷி கூறினார்
இன்று காலையில் இந்த விவகாரம் தொடர்பாக மலேசியத் தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்கப்பட்டு விட்டது.
மக்கோத்தா சட்டமன்றம் தொடர்பாக மலேசியத் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று டத்தோ டாக்டர் புவாட் ஸர்காஷி சொன்னார்.
கடந்த வெள்ளிக்கிழமை, 64 வயதான டத்தோ ஷரிஃபா அஸிஸா உடல்நலக்குறைவால் காலமானார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் தேமு சார்பாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2025, 1:41 pm
சபா அம்னோவில் பிரிவினைகள் இல்லை: டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தகவல்
May 17, 2025, 11:39 pm
ஏழாவது மாடியிலிருந்து பாலகன் விழுந்து மரணம்: போலீஸ் தகவல்
May 17, 2025, 11:21 pm
பெட்ரோனாஸ் நிறுவனத்துடன் இணைந்து சரவாக் மாநில பணியாற்ற தயாராக உள்ளது: அபாங் ஜோ தகவல்
May 17, 2025, 6:31 pm
ஒரு கவிஞனின் மறைவில் உருவானது தான் பா. இராமு அறக்கட்டளை: டத்தோஸ்ரீ சரவணன்
May 17, 2025, 6:19 pm