
செய்திகள் மலேசியா
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஒற்றுமையுடன் ஒன்று திரளுங்கள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு
கோலாலம்பூர்:
இன்று புக்கிட் ஜாலில் உள்ள ஆசியாட்டா அரங்கில் நடைபெறவுள்ள ‘‘Himpunan Pembebasan Palestin’ பேரணியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஒற்றுமையுடன் திரளுமாறு மலேசியர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
இறைவன் நாடினால், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாலஸ்தீன மக்களுக்கு மலேசியர்கள் ஆதரவை ஒற்றுமையுடன் வெளிப்படுத்துவோம். நதி முதல் கடல் வரை பாலஸ்தீனம் சுதந்திரமாக இருக்க வேண்டும் நேற்று இரவு முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
மாலை 6 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்த கூட்டம், ஹமாஸ் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலையை மலேசியா கண்டிக்கும். இஸ்ரேலிய சியோனிச ஆட்சியின் இரக்கமற்ற கொடுமையை எதிர்க்கிறது என்ற செய்தியை உலகிற்கு தெரிவிப்பதை இந்த பேரணி நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.
மேலும் பல தலைவர்களுடன் பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவை அறிவிக்கும் நிகழ்வில் பிரதமர் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil, பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் பேரணியில் குறைந்தது சுமார் 20,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 12:17 pm
மஹிமாவில் இணையும் ஆலயங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: டத்தோ சிவக்குமார்
September 14, 2025, 11:57 am
பல இன பன்முகத்தன்மை, கலாச்சாரமே மலேசியாவின் பலம்: பிரதமர்
September 14, 2025, 11:17 am
மலேசியா தினம் வேற்றுமையில் ஒற்றுமைக்கான சின்னமாகும்: இஸ்மாயில் சப்ரி
September 13, 2025, 11:33 pm
பத்துமலை மேல்குகையில் வெள்ளி ரத தேரோட்டம்: விமரிசையாக நடைபெற்றது
September 13, 2025, 10:37 pm
செப்டம்பர் இறுதிக்குள் ரோன் 95 பெட்ரோலின் விலை இன்னும் குறையும்: பிரதமர்
September 13, 2025, 10:35 pm
மலாய் மொழி நாடகப் போட்டி: தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அபாரத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறது: கோபிந்த் சிங்
September 13, 2025, 10:33 pm
ஒரு ஆணுடன் ஆபாச வீடியோவில் இருப்பதாக மிரடட்டல்; 100,000 அமெரிக்க டாலர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: ரபிசி
September 13, 2025, 6:18 pm