
செய்திகள் விளையாட்டு
பாரிஸ் ஒலிம்பிக் 2024: இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் மூன்றாவது பதக்கம் கிடைத்தது
பாரிஸ்:
உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்று வருகின்றன.
2024-இல் பாரிஸில் ஜூலை 26-இல் தொடங்கி ஆக. 11-ஆம் தேதி வரை 33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,672 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.
இதில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில் ஸ்வப்னில் குசேல் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
ஸ்வப்னில் குசேல் 451. 4 புள்ளிகள் பெற்று 3ஆம் இடம் பிடித்தார். சீனாவின் ஒய்.கே. லூ 463.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். உக்ரைன் வீரர் குலீஷ் 461 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார்.
இந்தியாவுக்கு கிடைத்த 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2025, 7:52 am
உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் 2 ஆட்டங்களில் இருந்து லியோனல் மெஸ்சி விலகல்
March 18, 2025, 2:13 pm
சிங்கப்பூர் ஓட்டப்பந்தய முன்னாள் வீராங்கனை ரேணுகா சத்தியநாதன் காலமானார்
March 18, 2025, 10:16 am
உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்திலிருந்து காயத்தினால் நெய்மர் விலகல்
March 18, 2025, 10:15 am
ரொனால்டோவின் ரியல்மாட்ரிட் சாதனையை முறியடிக்கும் எம்பாப்வே
March 17, 2025, 10:27 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
March 17, 2025, 10:26 am
70 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வென்று சாதித்தது நியூகாஸ்டல்
March 16, 2025, 7:20 pm
கராபாவ் கிண்ண இறுதியாட்டம்: லிவர்புல்- நியூகாஸ்டல் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை
March 16, 2025, 6:17 pm
அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் கிளப்களின் பட்டியல்
March 16, 2025, 2:27 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 16, 2025, 2:25 pm