
செய்திகள் உலகம்
சூடான் ராணுவ தளபதி மீது டிரோன் தாக்குதல்: 5 பேர் உயிரிழந்தனர்
கார்டோம்:
சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால் சூடானின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், சூடான் ராணுவ தளபதி அப்தல் பதா புர்கான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சூடானில் உள்ள கெபெயிட் நகரில் நடைபெற்ற ராணுவ பட்டமளிப்பு விழாவின்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாக சூடான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம் ராணுவ தளபதி அப்தல் பதா புர்ஹான் காயமின்றி உயிர் தப்பியதாகவும், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் சூடான் ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm
நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்
September 11, 2025, 12:42 pm