செய்திகள் கலைகள்
புயலில் உயிர்ப் பிழைத்த இந்தியச் சிறுமியைப் படம்பிடித்தவருக்கு விருது
கொல்கொத்தா:
கடும் புயலில் சிக்கி உயிர்ப் பிழைத்த இளம் பெண்ணைப் படம்பிடித்த சுப்பிராதிம் பட்டாச்சார்ஜி (Supratim Bhattacharjee) என்பவர் இவ்வாண்டின் Mangrove Photographer of the Year நிழற்பட விருது விழாவில் ஒட்டுமொத்த வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் அந்தச் சிறுமியை இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் (West Bengal) சுந்தரவனக் காட்டில் படம் பிடித்ததாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
படத்தில் அந்தச் சிறுமி புயலில் சேதமைடைந்த தமது வீட்டிற்கு முன் நிற்பதைக் காணலாம்.
"இக்கட்டான நிலைமையில் சிறுமியின் முகத்தில் வலிமையும் அமைதியும் தெரிந்தன" என்று பட்டாச்சார்ஜி கூறினார்.
Mangrove நிழற்பட விருது விழா இவ்வாண்டு 10ஆவது முறையாய் நடத்தப்பட்டதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
வனவிலங்குகள், கடலோரப் பகுதிகள், சதுப்புநிலக் காடு, கடல் பல்லுயிர்ச் சூழல் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் தொடர்பைக் காட்டும் நோக்கத்தில் விருது விழா நடத்தப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக் காடு உலகின் ஆகப் பெரிய சதுப்புநிலக் காடு.
ஆதாரம்: பிபிசி
தொடர்புடைய செய்திகள்
October 30, 2025, 7:32 am
மருத்துவத்திற்கு நிதி உதவி செய்ய முன் வந்த நடிகர் மம்முட்டி: பாராட்டும் இணையவாசிகள்
October 29, 2025, 5:45 pm
ஒரு அண்ணனாக, அதற்கு நான் ரவி தேஜாவுக்கு நன்றி சொல்கிறேன்: நடிகர் சூர்யா
October 27, 2025, 12:58 pm
பலூசிஸ்தானை ஆதரித்து பேசினாரா சல்மான் கான்?: தீவிரவாதிகள் பட்டியலில் சல்மானை சேர்த்த பாகிஸ்தான்
October 24, 2025, 12:03 pm
"தம்பி, தவறான தகவலைப் பரப்புவது தீங்கையே தரும்": விஜய் குறித்து பரவிய செய்திக்கு நடிகர் சூரி விளக்கம்
October 23, 2025, 4:33 pm
நடிகை மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி காலமானார்
October 23, 2025, 3:32 pm
இசையமைப்பாளரும் தேவாவின் சகோதரருமான சபேஷ் காலமானார்
October 20, 2025, 9:18 pm
துல்கர் சல்மானின் ‘காந்தா’ நவம்பர் 14இல் வெளியாகிறது
October 17, 2025, 8:11 pm
இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 சென்னையில் தொடங்கியது
October 17, 2025, 12:02 pm
