நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னா்  பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல்: ரயில் போக்குவரத்து முடங்கியது 

பாரிஸ்:

பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னா் ரயில்வே கட்டமைப்பைக் குறிவைத்து பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதலால் ரயில் போக்குவரத்து முடங்கியது. 

இதனால், ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், பிரான்ஸின் பிற பகுதிகளில் இருந்தும் போட்டி நடைபெறும் தலைநகா் பாரீஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரயில்கள் மூலம் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

 இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரயில்வே கட்டமைப்புகளைக் குறிவைத்து வியாழக்கிழமை நள்ளிரவில் தீவைப்பு, பொருள்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

Paris Olympics 2024: Railways 'Sabotaged' and Bomb Threat Disrupts  Franco-Swiss Airport Hours Before Start - TheDailyGuardian

இந்தத் தாக்குதல் பல பகுதிகளில் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டுள்ளது. ரயில் போக்குரவத்துக்கு மிகவும் முக்கியமான கண்ணாடி இழை (ஃபைபா் ஆப்டிக்ஸ்) கம்பிகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SNCF trains in France gradually resume after 'massive' arson attack: Chaos  for 800,000 travellers | Euronews

மேலும், தங்களது பயண திட்டங்களை ஒத்திவைக்குமாறு பயணிகளை ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், ஏற்கெனவே இதே போன்ற தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற தீவிர இடதுசாரி அமைப்புகள் இந்தத் தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என்று உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset