செய்திகள் உலகம்
சிங்கப்பூரை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக ஏவப்பட்ட போர் விமானங்கள்
சிங்கப்பூர்:
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சிங்கப்பூர் ஆகாயப்படை எஃப்15 ரக போர் விமானங்களை உடனே ஏவியது.
சிங்கப்பூரை நோக்கி வந்த AXB684 என்ற அந்த விமானத்தில் வெடிகுண்டு இருந்ததாக அந்த நிறுவனத்திற்கு மின்னஞ்சல்வழி தகவல் கிடைத்தது.
இந்த விமானம் மதுரையிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூரை நோக்கி வந்தது.
வெடிக்குண்டு மிரட்டலை தொடர்ந்து சிங்கப்பூர் ஆகாயப்படையின் எஃப் 15 ரக போர் விமானங்களில் இரண்டு அவசரமாக ஏவப்பட்டது.
மக்கள் கூட்டம் இல்லாத பகுதியில் விமானத்தை பாதுகாப்பாக வழிநடத்தி,
இறுதியாக இன்று இரவு 10.04 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கியது என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 10:20 am
18 ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை தொற்று பரவல்: 1000 மரணச் சம்பவங்கள் பதிவு
October 17, 2024, 11:25 am
உலகின் உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்
October 17, 2024, 11:14 am
Shein பொட்டலத்தில் கரப்பான் பூச்சி
October 17, 2024, 10:20 am
இலங்கையில் இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட 4 மலேசியர்கள் உட்பட 10 பேர் கைது
October 16, 2024, 7:02 pm
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 94 பேர் பலி
October 16, 2024, 12:05 pm
சீனாவில் நீர்வாழ் கண்காட்சி மையத்தில் நிஜ சுறாவைப் பார்க்க வந்த மக்களுக்கு ஏமாற்றம்
October 16, 2024, 10:23 am
மனைவியைத் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி: அமெரிக்காவில் சுவாரஸ்யம்
October 16, 2024, 10:17 am