செய்திகள் மலேசியா
ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசியக் கொடியை பெர்ட்ராண்ட் ரோடிக்ட் லிசஸ், நூர் ஷாஸ்ரின் ஆகியோர் ஏந்திச் சென்றனர்
பாரிஸ்:
ஒலிம்பிக் தொடக்க விழாவில் நாட்டின் தேசியக் கொடியை பெர்ட்ராண்ட் ரோடிக்ட் லிசஸ், நூர் ஷாஸ்ரின் ஆகியோர் ஏந்தி சென்றனர்.
இவ்வாண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நேற்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
இதில் ஒலிம்பிக் அரங்கில் தங்கப் பதக்கத்திற்கான மலேசியாவின் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அறைகூவலை ஏற்றுக் கொள்வதில் தேசியக் குழு உற்சாகமாக இருந்தது.
இந்நிலையில் தொடக்க விழா அணிவகுப்பில் முக்குளிப்பு நீச்சல் வீரர் பெர்ட்ராண்ட் ரோடிக்ட் லிசஸ், தடகள வீரர் நூர் ஷாஸ்ரின் முஹம்மத் லத்தீஃப் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்.
மேலும் ஆறு தடகள வீரர்கள், நான்கு அதிகாரிகளால் மலேசியக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
முன்னணி உள்ளூர் ஆடை வடிவமைப்பாளரான ரிஸ்மான் ருசைனி வடிவமைத்த தங்க வடிவத்துடன் ஆலிவ் பச்சை நிறத்தில் 'தெ மலாயா' பாணி வடிவமைப்பு ஆடையுடன் அவர்கள் நாட்டை பிரதிநிதித்து அழகாய் தோன்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 12:02 pm
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் உடல் நிலையில் முன்னேற்றம்: ஐ.ஜி.என் தகவல்
October 18, 2024, 11:11 am
மோட்டார் சைக்கிள்- வேன் விபத்து: முதலாம் ஆண்டு மாணவர் மரணம்
October 18, 2024, 10:47 am
2025-ஆம் ஆண்டு வரவுச் செலவு திட்டம்: மக்களின் நம்பிக்கையைப் பூர்த்திச் செய்யுமா?
October 18, 2024, 10:31 am
இன்று 2025-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டத்தை பிரதமர் அன்வார் தாக்கல் செய்கிறார்
October 17, 2024, 5:10 pm
சிலாங்கூர் சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டியின் இறுதி சுற்றுக்கு 10 பேர் தேர்வு: குணராஜ்
October 17, 2024, 4:15 pm
10 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு வகை போதைப் பொருளை போலிசார் பறிமுதல் செய்தனர்
October 17, 2024, 4:14 pm