நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனடாவில் ஹிந்து கோயில் மீது தாக்குதல்

ஒட்டாவா:

கனடாவின் எட்மாண்டன் நகரில் உள்ள சுவாமி நாராயண் ஹிந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

அந்தக் கோயிலின் சுற்றுப்புறச் சுவரில் இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் வெறுப்புணர்வை பரப்பும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவில், எட்மாண்டன் நகரில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோயிலில் இந்தியாவுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இச் சம்பவத்துக்கு எங்களின் கண்டனம். விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கனடா நாட்டு அதிகாரிகளிடம்  கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கனடா ஹிந்து வர்த்தக கழகம், ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் கனடா அரசை வலியுறுத்தியுள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset