
செய்திகள் மலேசியா
கெடா மாநில மந்திரி பெசார் முஹம்மத் சனூசிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை நாளை நீதிமன்றத்தில் செவிமெடுக்கப்படும்
அலோர் ஸ்டார்:
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் நியமனம், ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசியல் பரப்புரை நிகழ்ச்சி ஒன்றில் அவதூறாக பேசிய கெடா மாநில மந்திரி பெர்சார் டத்தோஶ்ரீ முஹம்மத் சனூசி மாட் நோருக்கு எதிராக இரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நாளை ஷாஆலாம் உயர்நீதிமன்றத்தில் செவிமெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி டத்தோ அஸ்லாம் சைனுடின் முன்னிலையில் இந்த வழக்கு நாளை காலை 9 மணிக்குச் செவிமெடுக்கப்படும். இந்த தகவலை டத்தோஶ்ரீ முஹம்மத் சனூசியின் வழக்கறிஞர் அவாங் அர்மடாஜயா தெரிவித்தார்.
இந்நிலையில், தமக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்ய கோரி சட்டத்துறை அலுவலகத்தில் சனூசி மேற்கொண்ட விண்ணப்பம் சட்டத்துறை அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது.
கடந்தாண்டு மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் டத்தோஶ்ரீ முஹம்மத் சனூசி இரு குற்றங்களைப் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2025, 1:02 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு மலாக்கா மாநில அரசு RM400,000 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது: ராவூப் யூசோ
March 14, 2025, 12:30 pm
தற்காப்பு மீட்புப் படை பெண் வீராங்கனைகள்: 4 மீட்டர் நீளமான ராஜநாகத்தை வெற்றிகரமாக பிடித்தனர்
March 14, 2025, 12:29 pm
கிளாந்தான் பள்ளிவாசலில் இந்தியர், சீனர் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நோன்பு திறந்தனர்
March 14, 2025, 12:21 pm
குற்றப் பின்னணியை கொண்ட 3 அந்நிய நாட்டினர் சிப்பாங்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர்
March 14, 2025, 12:04 pm
மூத்த குடிமகனுக்கு ‘பையில் குண்டு’ என்ற கூற்றுக்கு RM100 அபராதம்
March 14, 2025, 11:31 am
சிறந்த தலைமைக்கு போட்டி - பிகேஆர் மகளிர் பிரிவில் பிளவு இல்லை!
March 14, 2025, 10:43 am
இஸ்மாயில் சப்ரி இரண்டாவது நாளாக வாக்குமூலம் அளிக்க எம்ஏசிசி தலைமையகம் வந்தார்
March 14, 2025, 10:43 am
காணாமல் போன முதியவர் ஈப்போ ஹோட்டலில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்
March 14, 2025, 10:10 am