
செய்திகள் மலேசியா
கெடா மாநில மந்திரி பெசார் முஹம்மத் சனூசிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை நாளை நீதிமன்றத்தில் செவிமெடுக்கப்படும்
அலோர் ஸ்டார்:
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் நியமனம், ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசியல் பரப்புரை நிகழ்ச்சி ஒன்றில் அவதூறாக பேசிய கெடா மாநில மந்திரி பெர்சார் டத்தோஶ்ரீ முஹம்மத் சனூசி மாட் நோருக்கு எதிராக இரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நாளை ஷாஆலாம் உயர்நீதிமன்றத்தில் செவிமெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி டத்தோ அஸ்லாம் சைனுடின் முன்னிலையில் இந்த வழக்கு நாளை காலை 9 மணிக்குச் செவிமெடுக்கப்படும். இந்த தகவலை டத்தோஶ்ரீ முஹம்மத் சனூசியின் வழக்கறிஞர் அவாங் அர்மடாஜயா தெரிவித்தார்.
இந்நிலையில், தமக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்ய கோரி சட்டத்துறை அலுவலகத்தில் சனூசி மேற்கொண்ட விண்ணப்பம் சட்டத்துறை அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது.
கடந்தாண்டு மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் டத்தோஶ்ரீ முஹம்மத் சனூசி இரு குற்றங்களைப் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm
முதலை தாக்கியதில் 12 வயது சிறுவன் மரணம்
September 18, 2025, 11:58 am
2026 பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் நல்ல செய்தி காத்திருக்கிறது: ஷம்சுல் அஸ்ரி
September 18, 2025, 10:48 am
பெர்மிம் இளைஞர் தலைமைத்துவ முகாமில் 62 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
September 18, 2025, 10:46 am
சமையலறையில் கரப்பான் பூச்சிகள், எலிகள்: பினாங்கில் பிரபலமான உணவகம் தற்காலிகமாக மூட உத்தரவு
September 18, 2025, 10:24 am
5 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று மதியம் வரை நீடிக்கும்
September 18, 2025, 10:23 am
ஆசியான் வணிக மாநாடு; வட்டார பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மலேசியாவின் உறுதிப்பாட்டின் சான்றாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 18, 2025, 10:21 am