செய்திகள் மலேசியா
ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
பத்துமலை:
ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
பத்துகேவ்ஸ் ஸ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தில் இரு முடிக் கட்டு திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
சபரிமலைக்கு செல்ல முடியாதவர்கள் இன்று தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர்.
அவ்வகையில் ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தில் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
பக்தர்கள் அதிகரித்தாலும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வேளையில் தேவஸ்தானத்தின் தலைவர் யுவராஜா குருசாமி தலைமையிலான நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் ஐயப்ப வழிபாடு என்பது தனிநபர் வழிபாடு அல்ல.
மாறாக ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது.
இதனால் இந்த வழிபாடு குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
இது வரவேற்கக்கூடிய விஷயம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 2:16 pm
மஇகாவின் அரசியல் எதிர்காலத்தை மத்திய செயலவையே தீர்மானிக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 12:30 pm
இஸ்லாத்தை நிர்வாகத்தின் மையமாக மீட்டெடுக்க பாஸ் விரும்புகிறது: டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி
January 1, 2026, 12:07 pm
இன்று முதல், RM5 மில்லியன் வரை வருவாய் உள்ள வணிகங்கள் மின்னணு விலைப்பட்டியலை செயல்படுத்த வேண்டும்
January 1, 2026, 10:57 am
பத்துமலை 140 அடி முருகன் சிலையின் 20ஆம் ஆண்டு பூர்த்தி விழாவுடன் பன்னீர் அபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது
January 1, 2026, 1:37 am
மலேசியாவை ஒரு நாகரிக நாடாக மாற்றும் உறுதியுடன் மக்கள் ஒன்றுபட வேண்டும்: பிரதமர்
January 1, 2026, 1:36 am
