நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபரிமலை செல்லும் மலேசிய பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: யுவராஜா குருசாமி

பத்துமலை:

சபரிமலை செல்லும் மலேசிய பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

பத்துமலை ஸ்ரீ ஐப்பசுவாமி தேவஸ்தானத்தின் தலைவர் யுவராஜா குருசாமி இதனை வலியுறுத்தினார்.

ஆலயத்தில் இருமுடி கட்டு திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது.

காலை 9 மணி முதல் கிட்டத்தட்ட 10,000த்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்களின் காணிக்கையை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரையாக செல்வார்கள்.

பத்துமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தின் சார்பில் 350 பக்தர்கள் சபரிமலைக்கு செல்லவுள்ளனர்.

இதே போன்று மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு செல்வார்கள். 

அப்படி செல்லும் பக்தர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

காரணம் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் நிலவுவதாக அங்குள்ள தேவஸ்தானம் கூறியுள்ளது.

ஆகவே சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக அங்குள்ள விதிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது என்று யுவராஜா குருசாமி கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset