செய்திகள் மலேசியா
புத்தாண்டு சிறப்பு சோதனை: தாய்லாந்திலிருந்து திரும்பிய மூவர் போதைப்பொருள் வழக்கில் கைது
புக்கிட் காயு ஹிதம்:
தாய்லாந்தில் சுற்றுலா மேற்கொண்டுவிட்டு மலேசியாவுக்கு திரும்பிய மூன்று நண்பர்கள், போதைப்பொருள் சோதனையில் நேர்மறை முடிவு வந்ததையடுத்து, நேற்று மாலை கெடா தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் (AADK) மூலம் கைது செய்யப்பட்டனர் என்று தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் இயக்குனர் கைருல் அன்வார் பின் அஹ்மத் கூறினார்
ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதுடைய அம்மூன்று நண்பர்கள், 2026 புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, நேற்று மாலை 4 மணியளவில் இங்குள்ள குடிவரவு தனிமைப்படுத்து பாதுகாப்பு வளாகத்தில் (ICQS) கைது செய்யப்பட்டனர்.
காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்ற அந்த நடவடிக்கையில், மொத்தம் 13 நபர்கள், கெடா தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்புமூலம் கைது செய்யப்பட்டனர்.
“15 கார்கள், 25 மோட்டார் சைக்கிள்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 30 நபர்களிடம் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 18 முதல் 39 வயதுக்குட்பட்ட 13 நபர்கள் போதைப்பொருள் பயன்பாடுத்தி இருந்தார்கள் என தெரியவந்தது. அவர்களில் பெரும்பாலோர் கெட்டமைன் (ketamin) போதைப்பொருளை பயன்படுத்தியவர்கள்,” என்றார் அவர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் பிரிவு 3(1)(a) சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 2, 2026, 1:11 pm
புத்தாண்டு கொண்ட்டாத்தின் போது 12,000க்கும் மேற்பட்ட சம்மன்களை போலிசார் பிறப்பித்துள்ளனர்
January 2, 2026, 12:08 pm
குப்பை போட்டதற்காக 42 நபர்கள் மீது சமூக சேவை நடவடிக்கையுடன் அபராதமும் விதிக்கப்பட்டது
January 1, 2026, 2:25 pm
ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 2:16 pm
மஇகாவின் அரசியல் எதிர்காலத்தை மத்திய செயலவையே தீர்மானிக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 12:30 pm
