செய்திகள் மலேசியா
இந்துக்கள் தொடர்பான கோரிக்கைகளை அரசு செவிமடுக்கும் சக்தியை மலேசிய இந்து சங்கம் கொண்டிருக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
இந்துக்கள் தொடர்பான கோரிக்கைகளை அரசு செவிமடுக்கும் சக்தியை மலேசிய இந்து சங்கம் கொண்டிருக்க வேண்டும்.
மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
மஇகாவுக்கு அடுத்த மிகப் பெரிய சங்கமாக மலேசிய இந்து சங்கம் விளங்குகிறது.
இச்சங்கத்தில் பல லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் இச்சங்கத்தின் பலமும் ஆற்றலும் அரசுக்கு புரிவது இல்லை.
இந்நிலை மாற வேண்டும். மலேசிய இந்துகள் விவகாரம் என்றால் அதற்கு மலேசிய இந்து சங்கம் தான் பிரதிநிதி என்ற நிலை உருவாக வேண்டும்.
நாட்டில் அதிகமான இந்திய மாணவர்களின் கல்விக்கு உதவி வழங்கியது மஇகா தான்.
ஆனால் நேற்று மழைக்கு முளைத்தவர்கள் எல்லாம் மஇகா என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கு முறையாக ஆவணங்களும் பதிவுகளும் இல்லாததே அதற்கு காரணம்.மஇகா செய்த தவற்றை மலேசிய இந்து சங்கம் செய்யக் கூடாது.
நாட்டில் அதிகமான மாணவர்கள் திருமுறை படிப்பதற்கும் இந்து சமயத்தை பாதுகாப்பதற்கும் இந்து சங்கம் தான் காரணம்.
ஆகையால் எத்தனை மாணவர்கள் பயன் பெற்றனர் என்பதை இந்து சங்கம் முறையாக பதிவு செய்து வைக்க வேண்டும்.
காரணம் இந்து சங்கம் என்ன செய்தது என்று கேட்பவர்கள் சங்கத்திற்கு எதையும் செய்திருக்க மாட்டார்கள். இந்த பதிவுகள் அவர்களின் வாயை அடைக்கும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 10:55 pm
முதலீட்டில் சீனாவைவிட அமெரிக்கா இன்னும் உயர்ந்த நிலையில் உள்ளது: அன்வார்
January 17, 2025, 10:46 pm
மாறுபட்ட வேலை நேரம் அமைப்பு சுகாதாரப் பணியாளர்களின் பணிச் சுமையை குறைக்கும்: சூல்கிப்ளி
January 17, 2025, 6:16 pm
சரவாக்கில் நிகழ்ந்த பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையை போலிஸ் முடித்துள்ளது: ஐஜிபி ரஸாருடின் ஹுசைன்
January 17, 2025, 5:32 pm
கிந்தா இந்தியர் சங்கத்தின் பொங்கல் விழாவில் ஐந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பு
January 17, 2025, 4:18 pm
ஊழல் எதிர்ப்பு பேரணி தடையின்றி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ஹனிபா
January 17, 2025, 4:16 pm
இந்திய தொழில் முனைவர்களுக்கான தெக்குன் நிதியயை அமைச்சு முழுமையாக கண்காணிக்கும்: டத்தோஶ்ரீ ரமணன்
January 17, 2025, 4:14 pm
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 448 பிள்ளைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்: நான்சி சுக்ரி
January 17, 2025, 4:14 pm
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் மீறியதில்லை: நஜிப்
January 17, 2025, 2:31 pm