செய்திகள் உலகம்
வங்கதேசத்தில் ஊரடங்கு: வன்முறையைக் கட்டுப்படுத்த அரசு உத்தரவு
டாக்கா:
வங்கதேசத்தில் பரவி வரும் பயங்கர வன்முறையைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்தியப் பிரிவினைக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம் விடுதலைப் போரில் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
அப்போது இந்திய உதவியுடன் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட முக்திவாஹினி அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் மாணவர்களின் போராட்டம் வெடித்தது.
இந்தப் போராட்டத்தில் 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டாக்காவில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் குண்டுகளை வீசி கலைத்தனர்.
டாக்கா அருகே உள்ள சிறையை உடைத்து ஒரு கும்பல் கைதிகளை விடுவித்தது.
பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கிருந்த சுமார் 300 மாணவர்கள் இந்தியா திரும்பினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 9:49 am
ஜப்பானின் ஆயுதப் புரட்சி: உலகச் சந்தையில் நுழையும் போர்க்கப்பல்களும் ஏவுகணைகளும்
April 20, 2026, 4:07 pm
ஹார்முஸில் ஈரான் கப்பலை கைப்பற்றிய ‘யுஎஸ் மரைன்ஸ்’: பதிலடிக்கு தயாராகும் தெஹ்ரான்
April 20, 2026, 4:03 pm
அமெரிக்க போர்க் கப்பல் மலாக்கா நீரிணை வழியாகச் சென்றது
April 20, 2026, 10:38 am
புளோரிடாவில் விபத்துக்குள்ளான இலகுரக விமானம்
April 20, 2026, 10:21 am
போரின் விளைவு: வான்வழித் தாக்குதலால் முடங்கிய 20 விமானங்கள்
April 19, 2026, 6:57 pm
கியூபாவை கைப்பற்ற போவதாக டிரம்ப் மிரட்டல் பேச்சு: மெக்சிகோ, பிரேசில், ஸ்பெயின் கடும் கண்டனம்
April 19, 2026, 10:12 am
குவிந்து கிடந்த பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள்: குற்றச் செயல்களின் கூடாரமாகிறதா திரினிடாட்?
April 18, 2026, 2:16 pm
