
செய்திகள் உலகம்
வங்கதேசத்தில் ஊரடங்கு: வன்முறையைக் கட்டுப்படுத்த அரசு உத்தரவு
டாக்கா:
வங்கதேசத்தில் பரவி வரும் பயங்கர வன்முறையைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்தியப் பிரிவினைக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம் விடுதலைப் போரில் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
அப்போது இந்திய உதவியுடன் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட முக்திவாஹினி அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் மாணவர்களின் போராட்டம் வெடித்தது.
இந்தப் போராட்டத்தில் 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டாக்காவில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் குண்டுகளை வீசி கலைத்தனர்.
டாக்கா அருகே உள்ள சிறையை உடைத்து ஒரு கும்பல் கைதிகளை விடுவித்தது.
பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கிருந்த சுமார் 300 மாணவர்கள் இந்தியா திரும்பினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 9:56 am
தொடரும் இஸ்ரேலின் போர் தாக்குதல்: காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58,000-ஐ கடந்தது
July 15, 2025, 4:53 pm
மெக்சிகோ தக்காளிக்கு 17 விழுக்காடு வரி: அமெரிக்கா அறிவிப்பு
July 15, 2025, 3:17 pm
பணியாளர்கள் 4 நாள்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும்: ஸ்டார்பக்ஸ்
July 15, 2025, 3:05 pm
தூதரை ஏற்கும் அல்லது மறுக்கும் முழுமையான உரிமை மலேசியாவிற்கு உள்ளது – ஃபாஹ்மி
July 15, 2025, 12:44 pm
25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் ஏலம்
July 14, 2025, 10:29 am
KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி
July 12, 2025, 2:22 pm