செய்திகள் மலேசியா
ஐ.நா மன்றத்தில் ஒலிக்கப் போகிறது 'மலேசிய குடும்பம்' கோட்பாடு: பிரதமரின் உரையில் இடம்பெறும்
புத்ராஜெயா:
'மலேசிய குடும்பம்' எனும் செய்தியை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் உலக அரங்கிற்கும் கொண்டு செல்ல இருக்கிறார். ஐ.நா மன்றத்தின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தில் நாளை உரையாற்றும்போது இந்தச் செய்தியை அவர் குறிப்பிட உள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், முன்பே பதிவு செய்யப்பட்ட காணொளிப் பதிவாக பிரதமரின் உரை பொதுச்சபை கூட்டத்தில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"பொது விவாதத்தின்போது 'உலகம் ஒரு குடும்பம்' எனும் கருப்பொருளை பிரதமர் முன்னிலைப்படுத்துவார். மேலும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு எவ்வாறு உலகக் குடும்பத்துடன் 'மலேசிய குடும்பம்' இணைந்து செயலாற்றும் என்பது குறித்தும் விவரிப்பார்.
"மேலும், பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாட்டை மறு உறுதி செய்வதுடன், ஐ.நா சபை சீர்திருத்தங்கள், நிலையான மேம்பாட்டு இலக்குகள் மற்றும் உலகளாவிய போர் நிறுத்தம் குறித்தும் பிரதமர் தமது உரையில் குறிப்பிடுவார்," என வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 10:37 am
நாளை நோன்பு பெருநாள்: கிழக்கு கடற்கரை, பிளஸ் நெடுஞ்சாலைகளை கடும் போக்குவரத்து நெரிசல்
March 20, 2026, 10:13 am
பட்டாசு வெடித்த போது நிகழ்ந்த விபத்த்தில் இளைஞர் பலத்த காயங்களுக்கு இலக்கானார்
March 20, 2026, 10:11 am
சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் அவசரம் வேண்டாம்; விவேகமாக இருங்கள்: பகாங் சுல்தான்
March 19, 2026, 10:25 pm
குடும்ப வன்முறை: கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய கணவர் கைது
March 19, 2026, 10:23 pm
பெர்லிஸ் மாநிலத்தில் ‘ஓப்ஸ் பெரந்தாவ்' அமலாக்க திட்டம்
March 19, 2026, 9:51 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அலைபோல் திரண்ட வாகனங்களினால் நிரம்பிய முக்கிய நெடுஞ்சாலைகள்
March 19, 2026, 9:49 pm
நிச்சயமற்ற சூழலில் செலவு செய்யும் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
March 19, 2026, 9:48 pm
நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையில் டீசல் விற்பனை பொருத்தமற்றது: ஹம்சா
March 19, 2026, 9:48 pm
