
செய்திகள் கலைகள்
எம்.டி. வாசு தேவன் நாயரின் 91ஆவது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த கலைத் துறை
ஞானவயோதிகனின் குழந்தைமை தமிழ் மண்ணிலிருந்து மலையாள மண்ணைப் பார்த்து சற்றே அசூயைக் கொள்ளும் விஷயம் மலையாள இலக்கிய உலகுக்கும் மலையாள திரை உலகுக்கும் இடையில் இழையோடும் ஆரோக்கியமான உறவு.
தமிழில் அப்படியான உறவுநிலை ஒன்று உருவாகவே இல்லை. எழுத்திலிருந்து தமிழ்த்திரை நோக்கி நகர்ந்தவர்களும் சினிமாவின் எல்லா போலிமைகளுக்கும் தங்களை ஒப்புக்கொடுக்கும் நிலையே இருக்கிறது.
பண்ணை யார்விட்ட குசுவைக்கூட பெருமித மாய்பேசும் தொழிலாளி மனநிலையே தமிழ் எழுத்தாளர்களிடம் தூக்கலாக இருக்கிறது.
இரண்டு மூன்று நாட்களாக இதுகுறித்த அங்கலாய்ப்பும் முகநூலில் வெளிப்படுகிறது.
போகன் சங்கர், பேராசிரியர் அ. ராமசாமி இருவரும் இது குறித்து பதிவு களை வெளிட்டுள்ளார்கள். ஜெயகாந் தனின் ;'சினிமாவுக்குப் போன சித்தாளு' எனும் புனைவுத்தலைப்பு மீண்டும் மேல் வருகிறது.
மலையாள இலக்கியத்தின் மூத்த ஆளுமை ஞானபீடம், பத்மவிபூசன் என விருதுகளை சிறப்பித்த எம்.டி. வாசு தேவன் நாயரின் 91 –ஆவது பிறந்த நாளை மலையாளத் திரையுலகினர் அத்தனை அழகாகக் கொண்டாடினார் கள். முன் வரிசை நடிகர்கள் மிக இயல்பாக இருந்தார்கள்.
தங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரன் ஒருவரை மகிழ்விப்பதுபோல் எம்.டி.வி. யை மகிழ்வித்தார்கள்.
91 வயதைத்தொடும் எம்.டி. வாசுதேவன் நாயர் மறுபடியும் குழந்தையாகி இருக் கிறார்.
நிகழ்வில் நடிகர் மம்முட்டியின் மார்பில் சற்றுநேரம் அவர் தலைசாய்த் திருந்த காட்சி அத்தனை நெகிழ்வானது .
மலையாள ஊடகம் ஒன்று எம்.டி.வி.யை ஞானவயோதிகன் என்று அழைத்தது. அழகான சொல் .
- தக்கலை ஹாமீம் முஸ்தஃபா
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 10:23 pm
முழங்காலிட்டு பத்திரிகையைப் பெற்று கொண்ட விஜய் சேதுபதி
July 2, 2025, 10:41 am
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்
June 29, 2025, 5:45 pm
பாதுகாப்பு காரணங்களுக்காக Mercedes Maybach GLS 600 புல்லட் புரூப் கார் வாங்கிய சல்மான்கான்
June 27, 2025, 8:37 pm
ஆமிர் கானின் தங்கல் படத் தடைக்கு தற்போது வருந்தும் பாகிஸ்தான்
June 26, 2025, 2:52 pm
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்
June 26, 2025, 2:27 pm