
செய்திகள் மலேசியா
மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: டத்தோ ரமணன்
சுங்கைபூலோ:
மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோ ஆர். ரமணன் இதனை தெரிவித்தார்.
எஸ்பிஎம் தேர்வில் 10ஏ அதற்கும் மேல் எடுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பை ஒது சிலர் சர்ச்சையாக்கி வருகின்றர்.
பூமிபுத்ரா மாணவர்களை பாதிக்காமல் எப்படி இந்த வாய்ப்பு மற்ற மாணவர்களுக்கு கிடைக்கும் என கேள்வி எழுப்புகிறார்கள்.
என்னை பொருத்த வரையில் பிரதமர் கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
அதே வேளையில் நமது மாணவர்கள் முறையாக அதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அப்படியே தகுதி இருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அது குறித்து தகவல் கொடுங்கள்.
நிச்சயம் அம்மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்.
ஆகையால் இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம்.
இதனால் மாணவர்களின் எதிர்காலம் தான் பாதிக்கும் என்று டத்தோ ரமணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm