
செய்திகள் மலேசியா
கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு 7 நாட்களில் தீர்வை வழங்க வேண்டும்: அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை
கோலாலம்பூர்:
பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலையிட்டு 7 நாட்களில் தீர்வை வழங்க வேண்டும்.
டத்தோ கலைவாணர் தலைமையிலான அரசு சாரா அமைப்புகள் இக் கோரிக்கையை முன்வைத்தன.
சாலை விரிவாக்கத்திற்கு வழிவிடும் வகையில் மேம்பாட்டு நிறுவனம் கின்றாரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் ஒரு பகுதியை கோருகிறது.
700 மாணவர்கள் கல்வி பயின்று வரும் பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் ஒரு சதுர அடிகூட எடுக்கக் கூடாது.
இன்று நாடாளுமன்ற வளாகத்தின் முன் திரண்ட தமிழ் அமைப்புகளுக்கு தலைமையேற்ற டத்தோ கலைவாணர் இதனை கூறினார்.
இது தொடர்பான மகஜர் பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழன் உதவும் கரங்கள் தலைவர் முரளி, பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மதியழகன், செல்வேந்திரன், தமிழ் கலை உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இம்மகஜர் பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். பிரதமர் இந்த விவகாரத்திற்கு உரிய தீர்வை வழங்க வேண்டும்.
இல்லையென்றால் பள்ளியை காக்கும் போராட்டம் தொடரும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 10:36 pm
போலிஸ் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்; இருவரின் உடல் நிலை ஆபத்தான நிலையில் உள்ளது: ஐஜிபி
July 10, 2025, 10:34 pm
தொழிற்சாலை பேருந்து கால்வாயில் கவிழ்ந்தது: ஓட்டுநர் உட்பட 22 பயணிகள் காயம்
July 10, 2025, 10:15 pm
காசாவில் அட்டூழியங்கள் நிறுத்தப்பட வேண்டும்: ரூபியோவிடம் பிரதமர் வலியுறுத்தினார்
July 10, 2025, 6:26 pm
அரசு பல்கலைக்கழகங்களில் நுழைய எஸ்டிபிஎம் கல்வி சிறந்த தேர்வாகும்: செனட்டர் சரஸ்வதி கந்தசாமி
July 10, 2025, 5:18 pm
மக்களின் நலனுக்காகவே நினைவில் இருக்க விரும்புகிறேன்: துன் டாக்டர் மகாதீர்
July 10, 2025, 4:53 pm