
செய்திகள் மலேசியா
கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு 7 நாட்களில் தீர்வை வழங்க வேண்டும்: அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை
கோலாலம்பூர்:
பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலையிட்டு 7 நாட்களில் தீர்வை வழங்க வேண்டும்.
டத்தோ கலைவாணர் தலைமையிலான அரசு சாரா அமைப்புகள் இக் கோரிக்கையை முன்வைத்தன.
சாலை விரிவாக்கத்திற்கு வழிவிடும் வகையில் மேம்பாட்டு நிறுவனம் கின்றாரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் ஒரு பகுதியை கோருகிறது.
700 மாணவர்கள் கல்வி பயின்று வரும் பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் ஒரு சதுர அடிகூட எடுக்கக் கூடாது.
இன்று நாடாளுமன்ற வளாகத்தின் முன் திரண்ட தமிழ் அமைப்புகளுக்கு தலைமையேற்ற டத்தோ கலைவாணர் இதனை கூறினார்.
இது தொடர்பான மகஜர் பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழன் உதவும் கரங்கள் தலைவர் முரளி, பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மதியழகன், செல்வேந்திரன், தமிழ் கலை உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இம்மகஜர் பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். பிரதமர் இந்த விவகாரத்திற்கு உரிய தீர்வை வழங்க வேண்டும்.
இல்லையென்றால் பள்ளியை காக்கும் போராட்டம் தொடரும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 9:25 pm
தேசிய வருவாய் இன்னும் கசிந்து கொண்டிருக்கும் பட்சத்தில் புதிய வரிகள் தேவையில்லை: பிரதமர்
October 21, 2025, 8:41 pm
தேசிய பொருளாதாரத் தலைவராக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து வழிநடத்தப்படும்: ஜாஹித்
October 21, 2025, 8:40 pm
பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற சந்தேக நபர் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
October 21, 2025, 8:39 pm
என் மீது நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டது: நஜிப்
October 21, 2025, 4:25 pm
துன் மகாதீருக்கு உடல்நிலை சரியில்லை: அவதூறு வழக்கு விசாரணை 30 நிமிடங்களுக்கு மட்டுமே நீடித்தது
October 21, 2025, 4:14 pm