செய்திகள் மலேசியா
கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு 7 நாட்களில் தீர்வை வழங்க வேண்டும்: அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை
கோலாலம்பூர்:
பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலையிட்டு 7 நாட்களில் தீர்வை வழங்க வேண்டும்.
டத்தோ கலைவாணர் தலைமையிலான அரசு சாரா அமைப்புகள் இக் கோரிக்கையை முன்வைத்தன.
சாலை விரிவாக்கத்திற்கு வழிவிடும் வகையில் மேம்பாட்டு நிறுவனம் கின்றாரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் ஒரு பகுதியை கோருகிறது.
700 மாணவர்கள் கல்வி பயின்று வரும் பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் ஒரு சதுர அடிகூட எடுக்கக் கூடாது.
இன்று நாடாளுமன்ற வளாகத்தின் முன் திரண்ட தமிழ் அமைப்புகளுக்கு தலைமையேற்ற டத்தோ கலைவாணர் இதனை கூறினார்.
இது தொடர்பான மகஜர் பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழன் உதவும் கரங்கள் தலைவர் முரளி, பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மதியழகன், செல்வேந்திரன், தமிழ் கலை உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இம்மகஜர் பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். பிரதமர் இந்த விவகாரத்திற்கு உரிய தீர்வை வழங்க வேண்டும்.
இல்லையென்றால் பள்ளியை காக்கும் போராட்டம் தொடரும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 5:40 pm
தோமி தோமஸ் வழக்கின் தீர்வு நஜிப்பிற்கு கிடைத்த வெற்றி: ஷாபி அப்துல்லா
January 19, 2026, 5:40 pm
சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் தங்கள் வருமானத்தை அறிவிக்க வேண்டும்
January 19, 2026, 5:39 pm
ஈப்போவில் இரு ஆலயங்களுக்கான நிலப் பிரச்சினைகளுக்கு தீர்வு பிறந்தது: சிவநேசன்
January 19, 2026, 5:38 pm
தைப்பூச பக்தர்களுக்காக்க புந்தோங் சுங்கை பாரி மேம்பாலம் தற்காலிகமாக திறக்கப்படும்: துளசி
January 19, 2026, 4:05 pm
கினாபத்தாங்கானில் நடந்த கொடூரம்: செம்பனைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை
January 19, 2026, 3:22 pm
ஷா ஆலாமில் கடத்தப்பட்ட காரும், 13 வயது சிறுமியும் பாதுகாப்பாக மீட்பு
January 19, 2026, 3:03 pm
ஸ்டார் ட்யூட்டர் ஏற்பாட்டில் 350 மாணவர்களுக்கு சிறப்பு செய்த ஸ்டார் விருது விழா
January 19, 2026, 2:52 pm
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு அரசாங்கம் ஒதுக்கிய புதிய இடம் தயாராக உள்ளது: ஹன்னா இயோ
January 19, 2026, 2:51 pm
