செய்திகள் மலேசியா
டத்தோ மோகனுடனான புனிதனின் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோலாலம்பூர்:
டத்தோ மோகனுடனான புனிதனின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஇகாவில் அசைக்க முடியாத முன்னணித் தலைவராக டத்தோ டி. மோகன் விளங்கி வந்தார்.
ஆனால் அண்மையில் நடைபெற்ற கட்சியின் உதவித் தலைவருக்கான தேர்தலில் அவர் தோல்வி கண்டார்.
இது மஇகா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டத்தோ மோகனின் தோல்வி இந்திய சமுதாயத்திற்கும் கட்சிக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்று ம இகா தேசிய முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி தலைவர் புனிதன், அதன் துணை தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் டத்தோ டி. மோகனை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களை புனிதன் முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த படங்கள் வெளியான சிறிது நேரத்தில் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலேசிய இந்திய மக்கள் கட்சியில் டத்தோ மோகன் இணைகிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
டத்தோ மோகன் நீண்ட கால நண்பர். இந்திய சமுதாயத்தின் நலன்கள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக புனிதன் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 8:46 am
வெள்ளம் சூழும் அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
November 25, 2025, 8:18 am
2021 முதல் 5,293 ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளனர்: ஃபட்லினா
November 24, 2025, 9:28 pm
ஜாலான் கிள்ளான் லாமாவில் 10 மீட்டர் அளவுக்கு நிலச்சரிவு
November 24, 2025, 9:26 pm
முழு முயற்சியுடன் எஸ்பிஎம் தேர்வை எழுதுங்கள்: மாணவர்களுக்கு டத்தோ லோகா பாலமோகன் வலியுறுத்து
November 24, 2025, 9:25 pm
வீட்டுக் காவல் மனுவின் நிலை என்ன என்பதை அறிய நஜிப் ஜனவரி 5 வரை காத்திருக்க வேண்டும்
November 24, 2025, 9:24 pm
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்னாள் தேசிய வூஷு பயிற்சியாளர் மறுத்தார்
November 24, 2025, 7:37 pm
இந்திரா காந்தி வழக்கை உடனடியாக தீர்க்க அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்துங்கள்: டத்தோ சிவக்குமார்
November 24, 2025, 5:36 pm
