செய்திகள் மலேசியா
டத்தோ மோகனுடனான புனிதனின் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோலாலம்பூர்:
டத்தோ மோகனுடனான புனிதனின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஇகாவில் அசைக்க முடியாத முன்னணித் தலைவராக டத்தோ டி. மோகன் விளங்கி வந்தார்.
ஆனால் அண்மையில் நடைபெற்ற கட்சியின் உதவித் தலைவருக்கான தேர்தலில் அவர் தோல்வி கண்டார்.
இது மஇகா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டத்தோ மோகனின் தோல்வி இந்திய சமுதாயத்திற்கும் கட்சிக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்று ம இகா தேசிய முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி தலைவர் புனிதன், அதன் துணை தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் டத்தோ டி. மோகனை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களை புனிதன் முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த படங்கள் வெளியான சிறிது நேரத்தில் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலேசிய இந்திய மக்கள் கட்சியில் டத்தோ மோகன் இணைகிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
டத்தோ மோகன் நீண்ட கால நண்பர். இந்திய சமுதாயத்தின் நலன்கள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக புனிதன் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 23, 2026, 10:34 pm
7 அமைச்சர்களின் புதிய அரசியல் செயலாளர்களின் பதவிப் பிரமாணம்: பிரதமரின் முன்னிலையில் நடைபெற்றது
January 23, 2026, 9:25 pm
எச்ஆர்டி கோர்ப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முகமது ஷாமிர் நியமனம்
January 23, 2026, 9:24 pm
6ஆவது ஆண்டாக தூய்மையான தைப்பூசம் திட்டம்; 600 தொண்டூழியர்களுடன் மேற்கொள்ளப்படும்: விக்கி
January 23, 2026, 12:36 pm
பெர்மிம் பேரவை ஏற்பாட்டில் இந்திய முஸ்லிம் தொழில்முனைவோரை உருவாக்கும் பட்டறை
January 23, 2026, 12:30 pm
பினாங்கு தைப்பூச கொண்டாட்டங்களை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு இலவச ஃபெர்ரி சேவை
January 23, 2026, 11:29 am
மாற்றுத் திறனாளி ஓய்வூதியத்தை பெறுவதற்காக போலி ஆவணங்களை உருவாக்கும் கும்பலை சொக்சோ, எம்ஏசிசி முறியடித்தன
January 23, 2026, 9:19 am
