செய்திகள் மலேசியா
செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளிக்கு 50,000 ரிங்கிட் மானியம்; பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவது பெற்றோரின் கடமையாகும்: பிரபாகரன்
கோலாலம்பூர்:
பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவது பெற்றோரின் கடமையாகும்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் இதனை கூறினார்.
செந்தூல் அரசு தமிழ்ப்பள்ளிக்கு இன்று 50,000 ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டது.
பத்து நாடாளுமன்ற தொகுதியின் சார்பில் இம்மானியம் வழங்கப்பட்டது.
இப் பள்ளியின் மேம்பாட்டுத் திட்டங்கள், மாணவர்களின் கல்வித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் நோக்கில் இம் மானியம் வழங்கப்பட்டது.
இதே போன்று பத்து நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.
குறிப்பாக தொகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளி, மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
வரும் காலங்களிலும் இது தொடரும் என்று பிரபாகரன் கூறினார்.
இதனிடையே தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக பதிவுகள் காட்டுகிறது.
இதற்கு இந்திய சமுதாயத்தின் பிறப்பு விகிதம் உட்பட பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
எது எப்படி இருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளை காப்பது அனைவரின் பொறுப்பாகும்.
குறிப்பாக பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புவது பெற்றோரின் கடமையாகும் என்று பிரபாகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 23, 2026, 12:36 pm
பெர்மிம் பேரவை ஏற்பாட்டில் இந்திய முஸ்லிம் தொழில்முனைவோரை உருவாக்கும் பட்டறை
January 23, 2026, 12:30 pm
பினாங்கு தைப்பூச கொண்டாட்டங்களை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு இலவச ஃபெர்ரி சேவை
January 23, 2026, 11:29 am
மாற்றுத் திறனாளி ஓய்வூதியத்தை பெறுவதற்காக போலி ஆவணங்களை உருவாக்கும் கும்பலை சொக்சோ, எம்ஏசிசி முறியடித்தன
January 23, 2026, 9:19 am
எஸ்ஆர்சி சிவில் வழக்கு; 42 மில்லியன் ரிங்கிட் சவூதி அரேபிய நன்கொடை அல்ல: நஜிப்
January 22, 2026, 4:51 pm
பண மோசடியால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு நீதி கோரி பேங்க் நெகாராவில் மகஜர் வழங்கப்பட்டது: டத்தோ கலைவாணர்
January 22, 2026, 12:59 pm
