நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஓய்வின்றி அதிக வேலையால் தற்கொலை செய்து கொண்ட ரோபோட்

சியோல்: 

உலகத்தின் முதல் ரோபோ தற்கொலை சம்பவம் தென் கொரியாவில் பதிவாகியுள்ளது.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள அரசு அலுவலகத்தில் ரோபோ ஒன்று உதவியாளராக வேலை பார்த்து வந்தது. 

இந்த ரோபோவுக்கு தென்கொரிய அரசு ஊழியர் என்ற ஐடி கார்டும் இருந்தது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரமாக கொண்ட இந்த ரோபோ, அலுவலகம் வரும் உள்ளூர் வாசிகளிடம் இருந்து தினசரி ஆவணங்களை பெற்று, அதிகாரிகளிடம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த ரோபோ வழக்கம் போல் அலுவலகத்தில் பணியில் இருந்தது. அப்போது திடீரென அந்த 2-வது தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு இறங்கும் படிக்கட்டில் விழுந்து நொறுங்கியது.

ஓய்வின்றி அதிக வேலையில் ஈடுபட்டதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ரோபோ விழுந்து நொறுங்கியதாக கூறப்படும் நிலையில், இது ரோபோவின் தற்கொலையாக பார்க்கப்படுகிறது.

விழுந்து நொறுங்குவதற்கு முன்பாக 2-வது தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றிச் சுற்றி வந்ததாகவும், மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டதாகவும் அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் தெரிவித்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset