நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரிட்டன் தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் 14 ஆண்டு ஆட்சி  முடிவுக்கு வருகிறது  

லண்டன்:

பிரிட்டனில் நேற்று (ஜூலை 4) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. 

நாடு முழுவதும் 40 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 4.6 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 

வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. 

இந்நிலையில், லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அவர் பிரதமராகும் சூழல் உருவாகியுள்ளது. 

கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளார் ரிஷி சுனக் மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளார். 

பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. எனினும், இந்த காலகட்டத்தில் பிரதமர்கள் மாறிக் கொண்டே வந்துள்ளனர். இப்போது 5-வது நபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் (44) பிரதமராக பதவி வகிக்கிறார். அவரது கட்சியின் 14 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு நடந்த தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றது. அப்போது கார்டன் பிரவுன் பிரதமராக இருந்தார். 2010 தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்தது. 

14 ஆண்டுக்குப் பிறகு இக் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset