![image](https://imgs.nambikkai.com.my/zahid-1e516.jpg)
செய்திகள் மலேசியா
அனுவார் மூசாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது; சுங்கைப் பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டுமானம் மீண்டும் தொடங்க வேண்டும்: ஜாஹித் சாடல்
கோலாலம்பூர்:
சுங்கைப் பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டுமானம் உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும்.
துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஶ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு ஏற்கெனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்நிதி வேறொரு தேவைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நிபோங் திபாலில் வசிப்பவர்களுக்கு இது நியாயமானது. குறிப்பாக பள்ளி கட்டப்படாதது இங்குள்ள இந்திய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாகும். ஆகையால் அப்பள்ளி உடனடியாக கட்டப்பட வேண்டும்.
அதே போன்று சுங்கை பாக்காப்பில் முதியோர்களுக்கான நடவடிக்கை மையத்தை அமைக்க பரிந்துரை செய்தேன்.
இவை இரண்டும் எனது பரிந்துரை தான். இது தேர்தல் வாக்குறுதி அல்ல.
ஆனால் இதை முஃபகாத் நேஷனல் தலைவர் டான்ஶ்ரீ அனுவார் மூசா விமர்சித்து வருகிறார். அவரது விமர்சனம் அறிவுக்கு பொருந்தாது.
என்னை பொருத்த வரையில் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று ஜாஹித் ஹமிடி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2024, 4:09 pm
மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் முதலீடுகளில் கிட்டத்தட்ட 98 சதவீதம் லாபகரமானவை
July 7, 2024, 11:34 am
சுங்கை பாக்காப் தோல்விக்கு தேசிய விவகாரங்களே காரணம்: சாவ்
July 7, 2024, 10:40 am
மஇகா மத்திய செயலவை உறுப்பினர் தேர்தலில் அண்ட்ரூ டேவிட் முதல் நிலையில் வெற்றி
July 7, 2024, 4:03 am
மஇகா உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் அசோகன், முருகையா, நெல்சன் வெற்றி
July 6, 2024, 9:20 pm