நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MM2H திட்டத்தின் புதிய பங்கேற்பாளர்களுக்கு நிரந்தர வசிப்பிடத் தகுதி கிடையாது: சுற்றுலா அமைச்சர்

கோலாலம்பூர்:

மலேசியா எனது இரண்டாவது வீடு (எம்எம்2எச்) எனும் திட்டத்தின் புதிய பங்கேற்பாளர்கள், நிரந்தரவாசத்துக்கு (Permanent Resident) விண்ணப்பிக்கத் தகுதி பெற மாட்டார்கள் என்று சுற்றுலா அமைச்சர் தியோங் கிங் சிங் தெரிவித்தார்.

எம்எம்2எச் திட்டத்தில் உள்ள பிளாட்டினம், கோல்ட், சில்வர் ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் இது பொருந்தும்.

 ஃபேஸ்புக் பதிவில் எம்எம்2எச் திட்டத்தின் புதிய பங்கேற்பாளர்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.

புதிய அணுகுமுறையால் இலக்கு வைக்கப்பட்டவர்களை அதிகம் ஈர்க்க முடியும் என தமது அமைச்சு நம்புவதாகவும் அவர் சொன்னார்.

குறிப்பாக, நிகர சொத்து மதிப்புடைய தனிப்பட்டவர்கள், முன்னணி மின்னிலக்க தொழில்நுட்ப நிபுணர்கள் போன்றோருக்கு அவர்கள் விரும்பும் முதல் இடமாக மலேசியாவை ஆக்குவது எம்எம்2எச் திட்டத்தின் நோக்கமாகும்.

இத்தகைய பிரிவினர் இருப்பதால் உள்ளூர் பொருளியல் மேம்படும் என்பது மலேசியாவின் எதிர்பார்ப்பாகும்.

குறிப்பாக, சுற்றுலா, வீடமைப்பு, கல்வி, மருத்துவத் தொழில்களில் மலேசியாவை போட்டிமிகுந்த உலகளாவிய மையமாக்கும் என்று அமைச்சர் தியோங் குறிப்பிட்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset