 
 செய்திகள் உலகம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி எனத் தீர்ப்பு: 25 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு
வாஷிங்டன் டி சி:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) நாட்டுக்கு அதிபராக இருந்தாலும் அவரும் ஒரு மகனுக்குத் தந்தைதான் என்று கூறினார்.
அவரது மகன் ஹன்டர் பைடனுக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு அவர் பேசினார்.
தம் மகனுக்குத் தமது அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு என்று அவர் சொன்னார்.
அதிபர் பைடனின் மகன் ஹன்டர் பைடன் (Hunter Biden) துப்பாக்கி சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஹன்டர், கொக்கேய்ன் (Cocaine) போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தபோது ஒரு .38 கைத்துப்பாக்கியை வாங்கினார்.
துப்பாக்கியை வாங்கும்போது தாம் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று 54 வயது ஹன்டர் பொய் சொன்னதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்தது உட்பட அவர் மீது 3 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
மூன்றிலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு அதிகபட்சம் 25 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
ஆனால் அவர் முதல்முறை குற்றவாளி என்பதால் சிறைத்தண்டனை விதிக்கப்படாது என்று கூறப்படுகிறது.
தண்டனை அடுத்த சில மாதங்களில் அறிவிக்கப்படலாம்.
அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருக்கும் அதிபரின் மகன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
அதிபர் பைடன் மகனுக்கு எதிரான வழக்கின் முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிமன்ற நடைமுறையை மதிப்பதாகவும் கூறினார்.
ஹன்டர் பைடன் ஒரு வழக்கறிஞர். பிரபல யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
தாய்லாந்தின் பிரபல Hong Thai மூலிகை மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை
October 29, 2025, 8:52 pm
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்
October 29, 2025, 7:58 pm
காஸா மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தன தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழப்பு
October 29, 2025, 4:30 pm
சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை வழங்கிய நன்கொடை
October 29, 2025, 11:12 am
கென்யாவில் சுற்றுலா விமானம் விபத்து: ஜென்மனியர்கள் உட்பட 11 பேர் மரணம்
October 28, 2025, 4:13 pm
4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்
October 27, 2025, 12:31 pm
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி: 24 பேர் கைது
October 25, 2025, 3:45 pm

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 