
செய்திகள் வணிகம்
உலக தமிழ் வர்த்தகர்களை ஒன்றிணைக்கும் எழுமின் மாநாடு இனிதே தொடங்கியது
டாவோஸ்:
உலகத்தில் இருக்கும் தமிழ் தொழில் முனைவோர், திறனாளர்களை ஒன்றிணைக்கும் 13 வது எழுமின் மாநாடு சுவிட்ச்லாந்து டாவோஸ் நகரில் கோலாகலமாக தொடங்கியது.
இந்த மாநாட்டில் மலேசியா உட்பட 30க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 450 பேராளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்களுக்குள் வர்த்தக பரிமாற்றங்களை முன்னெடுக்கும் முயற்சியாக எழுமின் அமைப்பு தொடர்ந்து இம்மாநாட்டை நடத்தி வருகின்றது.
உலக அரங்கில் தமிழர்களின் வர்த்தகம் விரிவடைய வேண்டும் என்பதை அடித்தளமாகக் கொண்டு பலர் வர்த்தக பரிமாற்றங்களை இந்த மாநாட்டில் முன்னெடுத்து வருகின்றார்கள்.
கனடா, இந்தியா, ஐக்கிய அரபு சிற்றரசு, இங்கிலாந்து, அமெரிக்கா, வியட்நாம் கம்போடியா போன்ற நாடுகளில் இந்தியர்கள் எம்மாதிரியான வர்த்தக வாய்ப்புகளை முன்னெடுக்க முடியும் என்பது குறித்தும் இந்த மாநாட்டில் பேசப்பட்டது.
ஜூன் ஏழாம் தேதி தொடங்கி ஒன்பதாம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் இறுதியில் நூற்றுக்கும் அதிகமான வர்த்தக பரிமாற்றங்கள் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மலேசியாவில் இருந்து 30 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள். எஸ் பி கேர் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் மலேசியக் குழுவிற்கு தலைமை ஏற்று இருக்கின்றார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm