![image](https://imgs.nambikkai.com.my/tra-malaysia.jpg)
செய்திகள் வணிகம்
உலக தமிழ் வர்த்தகர்களை ஒன்றிணைக்கும் எழுமின் மாநாடு இனிதே தொடங்கியது
டாவோஸ்:
உலகத்தில் இருக்கும் தமிழ் தொழில் முனைவோர், திறனாளர்களை ஒன்றிணைக்கும் 13 வது எழுமின் மாநாடு சுவிட்ச்லாந்து டாவோஸ் நகரில் கோலாகலமாக தொடங்கியது.
இந்த மாநாட்டில் மலேசியா உட்பட 30க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 450 பேராளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்களுக்குள் வர்த்தக பரிமாற்றங்களை முன்னெடுக்கும் முயற்சியாக எழுமின் அமைப்பு தொடர்ந்து இம்மாநாட்டை நடத்தி வருகின்றது.
உலக அரங்கில் தமிழர்களின் வர்த்தகம் விரிவடைய வேண்டும் என்பதை அடித்தளமாகக் கொண்டு பலர் வர்த்தக பரிமாற்றங்களை இந்த மாநாட்டில் முன்னெடுத்து வருகின்றார்கள்.
கனடா, இந்தியா, ஐக்கிய அரபு சிற்றரசு, இங்கிலாந்து, அமெரிக்கா, வியட்நாம் கம்போடியா போன்ற நாடுகளில் இந்தியர்கள் எம்மாதிரியான வர்த்தக வாய்ப்புகளை முன்னெடுக்க முடியும் என்பது குறித்தும் இந்த மாநாட்டில் பேசப்பட்டது.
ஜூன் ஏழாம் தேதி தொடங்கி ஒன்பதாம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் இறுதியில் நூற்றுக்கும் அதிகமான வர்த்தக பரிமாற்றங்கள் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மலேசியாவில் இருந்து 30 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள். எஸ் பி கேர் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் மலேசியக் குழுவிற்கு தலைமை ஏற்று இருக்கின்றார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2024, 3:57 pm
கேஎல் லாருட் ஈய மண் நிறுவனத்திற்கு நான்கு நட்சத்திர தர அந்தஸ்து: ஓம்ஸ் தியாகராஜன்
July 24, 2024, 1:31 pm
ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைகிறது: ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்
July 14, 2024, 10:25 am
திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவை: பாத்தேக் ஏர் வழங்குகிறது
June 29, 2024, 6:02 pm
தீபிகா படுகோன் ஒரு புத்திசாலி முதலீட்டாளர்
June 26, 2024, 2:32 am
சமூக ஊடகங்கள் மூலம் மலிந்துவரும் ஊடாக மோசடி: இலங்கை அரசு பொது மக்களுக்கு எச்சரிக்கை
June 23, 2024, 1:51 pm
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி விலை உயர்ந்தது
June 12, 2024, 10:35 am