செய்திகள் இந்தியா
வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் 1 கோடி இந்தியர்களை மீட்கும் பணி விரைவில் துவங்கும்: இந்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி:
வளைகுடாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு வசிக்கும் சுமார் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு கவலை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 39 லட்சம் இந்தியர்களும், சவுதி அரேபியாவில் 27.5 லட்சம் பேரும், குவைத்தில் 10.1 லட்சம் பேரும், கத்தாரில் 8.3 லட்சம் பேரும், ஓமனில் 6.62 லட்சம் பேரும், பஹ்ரைனில் 3.47 லட்சம் பேரும் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக ஈரானில் சுமார் 10,000 இந்தியர்கள் உள்ள நிலையில், அங்கு செல்போன், இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களைத் தொடர்பு கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது.
ஈரானில் சிக்கியுள்ள சுமார் 10,000 இந்திய மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. டெஹ்ரான், சிராஸ், யாஸ்ட் நகரங்களில் பயிலும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அர்மேனியா வழியாகத் தரைவழியாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
துபாய், அபுதாபி விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான இந்தியப் பயணிகள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் தவித்து வரும் நிலையில், அவர்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு இந்தியத் தூதரகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிலையில் பிரதமர் மோடி, பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழுவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் வளைகுடா நாடுகளில் நிலவும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரவும், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வான்வழிப் போக்குவரத்து சீரானதும், சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரத் தேவையான சிறப்பு விமானங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 12:27 am
ஈரான் ஆதரவு பேச்சுகளை ‘கண்காணிக்க’ மாநில அரசுகளுக்கு இந்திய அரசு உத்தரவு
February 26, 2026, 4:34 pm
இந்தியாவில் 32 போலி பல்கலைக்கழகங்கள்
February 26, 2026, 3:00 pm
அனில் அம்பானியின் நிறுவனம் பல ஆயிரம் கோடி மோசடி: ரூ.3,716 கோடி மதிப்பிலான பங்களாவை முடக்கியது அமலாக்கத்துறை
February 26, 2026, 1:40 pm
இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதைப் பெற்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
February 26, 2026, 11:40 am
மண மேடையில் வைத்து மணப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய இளைஞர்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
