செய்திகள் கலைகள்
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், பாடகி சைந்தவி பிரிந்து வாழ முடிவு: 11 ஆண்டுகள் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது
சென்னை:
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், பாடகி சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளனர். இந்த தகவலை இருவரும் தங்களின் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியினால் இருவரின் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு பாடகி சைந்தவியை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இருவருக்கும் 2022ஆம் ஆண்டு அன்வி என்ற பெண் குழந்தை பிறந்தது. முன்னதாக, ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் விவாகரத்து பெற்று விட்டதாக நேற்று சமூக ஊடகங்களில் ஆருடங்கள் உலா வந்த நிலையில் இன்று இருவரும் அறிவித்துவிட்டனர்.
ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் பல ஹிட் பாடல்களை வழங்கியுள்ளனர். யார் இந்த சாலையோரம், யாரோ இவன் யாரோ இவன், பிறை தேடும் ஆகிய பாடல்கள் குறிப்பிடத்தக்க பாடல்களாகும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 6, 2026, 4:25 pm
பிரபல இயக்குநரின் மனைவியின் படப்பிடிப்பைத் துவங்கி வைத்த நடிகர் சூர்யா
April 3, 2026, 5:39 pm
அல்லு அர்ஜுனின் 25 வது படத்தை பசில் ஜோசப் இயக்குகிறார்
March 26, 2026, 6:40 pm
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மீண்டும் தள்ளிப் போகிறது
March 25, 2026, 6:30 pm
தென்கிழக்காசியாவின் மர்மமான 'பில்லி சூனியம்': வெள்ளித்திரையில் விரிந்த 'காங் தாவ்' மந்திர உலகம்
March 22, 2026, 6:30 pm
கலைஞர்களின் சேவையைப் போற்றும் மலேசியா: பி. ரம்லியின் 97-வது பிறந்தநாளில் சிறப்பு அங்கீகாரம்
March 22, 2026, 6:16 pm
மூன்றே நாட்களில் 500 கோடி வசூல் செய்த 'துரந்தர் 2' திரைப்படத்தின் சாதனை
March 20, 2026, 11:33 pm
"வலிமையின் அடையாளம் மறைந்தது": ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சக் நோரிஸ் காலமானார்
March 20, 2026, 4:19 pm
