நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மூன்றே நாட்களில் 500 கோடி வசூல் செய்த 'துரந்தர் 2' திரைப்படத்தின் சாதனை

மும்பை: 

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்: த ரிவெஞ்ச்' திரைப்படம், வெளியான மூன்றே நாட்களில் உலகளவில் 500 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையைப் படைத்துள்ளது.

2026-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஸ்பை திரில்லர் திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மார்ச் 19 அன்று வெளியான இத் திரைப்படம், முதல் நாளிலேயே இந்திய அளவில் சுமார் 102.55 கோடி ரூபாய் வசூல் செய்து பிரம்மாண்ட தொடக்கத்தைப் பெற்றது. 

இரண்டாம் நாளில் சற்று சரிவைக் கண்டாலும், மூன்றாவது நாளான சனிக்கிழமை அன்று மீண்டும் எழுச்சி பெற்று 113 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இதன் மூலம், இந்தியாவில் மட்டும் இதன் நிகர வசூல் 339.27 கோடி ரூபாயைக் கடந்துள்ளது.

சர்வதேசச் சந்தையிலும் இத்திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்தியத் திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான வசூலைப் பெற்று வருகிறது. 

இதுவரை உலகளவில் மொத்தம் 501.04 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளதாகத் திரைத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் போக்கைப் பார்த்தால், விரைவில் 2000 கோடி ரூபாய் வசூல் செய்த அமீர் கானின் 'தங்கல்' திரைப்படத்தின் சாதனையை இது நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், ஆர். மாதவன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதை, ரன்வீர் சிங்கின் மிரட்டலான நடிப்பிற்காகப் பாராட்டப்பட்டு வருகிறது. சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளால் தமிழ், தெலுங்கு பதிப்புகள் வெளியாவதில் சிறு தாமதம் ஏற்பட்டாலும், தற்போது அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset