செய்திகள் மலேசியா
திரட்டப்படும் நிதி வாயிலாக பத்துமலை தமிழ்ப்பள்ளியின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும்: தலைமையாசிரியர் சரஸ்வதி
பத்துமலை:
சிற்றுண்டி தினம் மூலம் திரட்டப்படும் நிதியின் வாயிலாக பத்துமலை தமிழ்ப்பள்ளியின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
பள்ளியின் தலைமையாசிரியர் சரஸ்வதி இதனை தெரிவித்தார்.
பத்துமலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மின்னியல் ரீதியில் கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே வேளையில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பல தளவாடப் பொருட்கள் சேதமடைந்துள்ளன.
இவற்றை எல்லாம் சீரமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம் ஆகியவை பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சிற்றுண்டி தினத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வின் வாயிலாக கிடைக்கும் நிதி நிச்சியம் பள்ளியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் இம்முயற்சிகளுக்கு எனது நன்றிகள்.
அதேவேளையில் பத்துமலை தமிழ்ப்பள்ளியின் சிற்றுண்டி தினத்திற்கு அனைவரும் முழு ஆதரவு தர வேண்டும்.
நீங்கள் தரும் அனைத்து ஆதரவும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பயன்பெறும் என்று தலைமையாசிரியர் சரஸ்வதி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2026, 10:45 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய பாதுகாப்பு நிறுவன லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்
February 5, 2026, 10:28 am
பிளஸ் நெடுஞ்சாலையில் விரைவுப் பேருந்து, இரண்டு லோரிகள் உட்படுத்திய விபத்தில் 31 பேர் பாதிப்பு
February 5, 2026, 7:17 am
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் கோலாலம்பூர் இலங்கைத் தூதரகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
February 4, 2026, 7:36 pm
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3ஆவது முறையாக மலேசியா வருகை: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சந்திக்கிறார்
February 4, 2026, 3:56 pm
அனைத்துலக சந்தைகளில் தங்க ஏடிஎம்களை பப்ளிக் கோல்ட் விரிவுபடுத்துகிறது: லூயிஸ் எங்
February 4, 2026, 3:53 pm
பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றிக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய அனைவருக்கும் நன்றி: டான்ஶ்ரீ நடராஜா
February 4, 2026, 11:08 am
