நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிளஸ் நெடுஞ்சாலையில் விரைவுப் பேருந்து, இரண்டு லோரிகள் உட்படுத்திய விபத்தில் 31 பேர் பாதிப்பு

உலு சிலாங்கூர்:

பிளஸ் நெடுஞ்சாலையில் விரைவுப் பேருந்து, இரண்டு லோரிகள் உட்படுத்திய விபத்தில் கிட்டத்தட்ட 31 பேர் பாதிக்கப்பட்டனர்.

சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முகிலிஸ் முக்தார் இதனை உறுதிப்படுத்தினார்.

இன்று அதிகாலை தெற்கு நோக்கிச் செல்லும் பிளஸ் நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 433 இல் விரைவுப் பேருந்து ஒன்றும்  இரண்டு லோரிகளும் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த சம்பவம் குறித்து காலை 5.12 மணிக்கு தீயணைப்புப் படைக்கு அழைப்பு வந்தது.

புக்கிட் செந்தோசா, ரவாங் தீயணைப்பு மீட்பு நிலையங்களில் இருந்து 16 பணியாளர்களுடன் தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

ஆரம்ப அறிக்கைகளின்படி, விபத்தில் ஒரு விரைவுப் பேருந்து, ஒரு பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த 10 டன் லோரி,  ஒரு டிரெய்லர் ஆகியவை சிக்கின.

விரைவுப் பேருந்தில் 14 ஆண்கள், ஐந்து பெண்கள், ஏழு குழந்தைகள், இரண்டு ஓட்டுநர்கள் இருந்தனர்.

ஓட்டுநர்களில் ஒருவரான 39 வயதுடைய ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டது. காலை 6.05 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டனர், மேலும் பலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

10 டன் எடையுள்ள லோரியில் ஓட்டுநர் சிக்கிக் கொண்டது கண்டறியப்பட்டது. அதன் ஓட்டுநர் உள்ளூர்வாசி. அவரது காயங்களின் நிலை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இதற்கிடையில், அவரது கூட்டாளியான 39 வயது நபருக்கு லேசான காயம் ஏற்பட்டது," என்று அவர் கூறினார், டிரெய்லர் ஓட்டுநருக்கும் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset