
செய்திகள் மலேசியா
பத்துமலை தமிழ்ப்பள்ளி சிற்றுண்டி தினம்; 10 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்க இலக்கு: ஹரிராஜா
பத்துமலை:
பத்துமலை தமிழ்ப்பள்ளி சிற்றுண்டி தினத்தை முன்னிட்டு 10 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்க பெற்றோர் ஆசிரியர் சங்கம் இலக்கு கொண்டுள்ளது. அச்சங்கத்தின் தலைவர் ஹரிராஜா இதனை தெரிவித்தார்.
பத்துமலை தமிழ்ப்பள்ளியின் சிற்றுண்டி தினம் வரும் ஜூன் 8ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இரண்டு முக்கிய நோக்கங்களை கொண்டு இந்த சிற்றுண்டி தினத்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பத்துமலை தமிழ்ப்பள்ளி மின்னியல் போதனா முறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த மின்னியல் போதனை முறைக்கு மாற கிட்டத்தட்ட 2 லட்சம் ரிங்கிட்டும் அதிகமான நிதி தேவைப்படுகிறது.
இதற்கு நிதி திரட்டுவது இந்த சிற்றுண்டி தினத்தில் முதன்மை நோக்கமாகும்.
அதேவேளையில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெற்றோர்களிடையே நல்லதொரு நட்புறவை ஏற்படுத்துவது இரண்டாவது நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
உணவு கடைகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என இந்த சிற்றுண்டி தினம் களை கட்டவுள்ளது.
அதேவேளையில் நாட்டில் புகழ்பெற்ற கலைஞரான காந்தீபனும் எங்களுடன் இணைந்துள்ளார்.
அதன் அடிப்படையில் இந்த சிற்றுண்டி தினம் மிகவும் கோலகலமாக நடைபெறும் என்று நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
ஆகவே பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், நல்லுள்ளங்கள், சுற்று வட்டார மக்கள் என அனைவரும் இந்த சிற்றுண்டி தினத்தில் கலந்துக் கொண்டு பள்ளி மேம்பாட்டிற்கு உதவ வேண்டுமென ஹரிராஜா கேட்டுக் கொண்டார்.
இந்த சிற்றுண்டி தினம் குறித்த மேல் விவரங்களுக்கு சங்கத்தின் துணைத் தலைவர் பூவனை 0133532829 தொடர்புக் கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2025, 7:20 pm
பெருவாஸ் தமிழ்ப்பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் விமரிசையாக நடந்தேறியது
September 6, 2025, 6:56 pm
புதன்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது
September 6, 2025, 6:38 pm
தமிழ் உள்ளடக்க கண்காணிப்பாளர்களை நியமிக்க தவறினால் டிக் டாக் தடை செய்யப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 6, 2025, 4:00 pm
விசா முடிந்த பின் 90 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு அபராதம்: சைபுடின்
September 6, 2025, 3:42 pm
அதிருப்திகளை வெளிப்படுத்த தேசிய முன்னணி உச்ச மன்றத்தை மஇகா பயன்படுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
September 6, 2025, 3:28 pm
ஷாரா வழக்கு விசாரணை முடியும் வரை மற்ற நபர்கள் மீது குற்றம் சாட்ட ஏஜிசிக்கு எந்த திட்டமும் இல்லை
September 6, 2025, 3:00 pm
மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் கேசவன் பெர்சத்து இளைஞர் பிரிவின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்
September 6, 2025, 2:38 pm
பெர்சத்துவுக்குள் ஒரு அழிவுகரமான கலாச்சாரத்தைக் கொண்டு வர வேண்டாம்: ஹம்சா
September 6, 2025, 1:25 pm