நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் தேர்தலில் தோல்விக் கண்டாலும் மக்களுக்கான எனது சேவை தொடரும்: சுயேட்சை வேட்பாளர் எரிஸ்

உலுசிலாங்கூர் -

கோல குபு பாருவில் தேர்தலில் தோல்விக் கண்டாலும் மக்களுக்கான எனது சேவை தொடரும்.

சுயேட்சை வேட்பாளர் எரிஸ் யாவ் கே ஷின்  இதனை உறுதியாக கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைஇடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நான் களமிறங்கியுள்ளேன். எண் 3 இல் எண்ணுடன் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்ற எண்ணத்துடன் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளேன்.குறிப்பாக நான் எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லை. 

அதே வேளையில் அரசியல் வாயிலாக மக்களுக்கு உரிய சேவைகளை வழங்க வேண்டும். அவர்களின் உரிமைக்காக போராட வேண்டும். இதுதான் எனது இலக்காக உள்ளது.

இந்த தேர்தலில் தோல்வி கண்டாலும் மக்களுக்கான எனது சேவை தொடரும்.

இதில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன் என்று எரிஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset