செய்திகள் மலேசியா
கோல குபு பாருவில் தேர்தலில் தோல்விக் கண்டாலும் மக்களுக்கான எனது சேவை தொடரும்: சுயேட்சை வேட்பாளர் எரிஸ்
உலுசிலாங்கூர் -
கோல குபு பாருவில் தேர்தலில் தோல்விக் கண்டாலும் மக்களுக்கான எனது சேவை தொடரும்.
சுயேட்சை வேட்பாளர் எரிஸ் யாவ் கே ஷின் இதனை உறுதியாக கூறினார்.
கோல குபு பாரு சட்டமன்ற இடைஇடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நான் களமிறங்கியுள்ளேன். எண் 3 இல் எண்ணுடன் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்ற எண்ணத்துடன் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளேன்.குறிப்பாக நான் எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லை.
அதே வேளையில் அரசியல் வாயிலாக மக்களுக்கு உரிய சேவைகளை வழங்க வேண்டும். அவர்களின் உரிமைக்காக போராட வேண்டும். இதுதான் எனது இலக்காக உள்ளது.
இந்த தேர்தலில் தோல்வி கண்டாலும் மக்களுக்கான எனது சேவை தொடரும்.
இதில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன் என்று எரிஸ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2024, 6:01 pm
மரணமடைந்த மீனவரின் குடும்பத்தினருக்கு பெர்கேசோ இழப்பீட்டு மனிதவள அமைச்சர் வழங்கினார்
May 20, 2024, 5:42 pm
சிலாங்கூர் போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: ஹுசைன் ஓமார் கான்
May 20, 2024, 5:40 pm
ஏப்ரல் மாதத்தில் விமானச் சேவைகளின் பயன்பாடு 19.5% அதிகரித்துள்ளது
May 20, 2024, 5:26 pm
அயன் திரைப்பட பாணியில் வயிற்றில் போதைப் பொருள் கடத்திய லத்தின் அமெரிக்க ஆடவர் கைது
May 20, 2024, 5:19 pm
சுங்கை சிப்புட் தொகுதி தேர்தலில் சின்னராஜூ அமோக வெற்றி
May 20, 2024, 5:05 pm
பேராக் மாநில இந்தியப்பள்ளி கூட்டுறவுக் கழகம் 60 ம் ஆண்டு கூட்டம்
May 20, 2024, 3:27 pm