நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரஸ்மாவின் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு: மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்

பெட்டாலிங் ஜெயா:

மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கமான பிரஸ்மாவின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

சங்க உறுப்பினர்கள் மட்டுமல்லாமல்  இதர அமைப்பின் பிரமுகர்களும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.

மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி, துணைத் தலைவர் டத்தோ முஹம்மது மொஹ்சின் வருகை தந்தோரை வரவேற்றனர்.

மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்க திறந்த இல்ல உபசரிப்புக்கு மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் வந்தவண்ணம் உள்ளனர். 
 
- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset