நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு இடைத் தேர்தல் அனைத்துலக கவனத்தை ஈர்த்துள்ளது: அஸ்மின் அலி

உலுசிலாங்கூர்:

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் அனைத்துலக கவனத்தை ஈர்த்துள்ளது.

எந்த நேரத்திலும் வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கும் அரசாங்கத்தின் பலவீனமான நிலையே இதற்குக் காரணம்.

தேசியக் கூட்டணியின் சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோஶ்ரீ  அஸ்மின் அலி இதனை கூறினார்.

புளூம்பெர்க் உட்பட வெளிநாட்டு ஊடகங்கள் கூட தற்போதைய மலேசிய அரசியல் நிலவரங்கள் குறித்து விசாரிக்க என்னை அணுகியது.

இந்த இடைத் தேர்தலை அனைத்துலக சமூகம் உட்பட அனைத்து மலேசியர்களும் கவனித்து வருகின்றனர்.

நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இப்போது, சிங்கப்பூரில் உள்ள அவர்களின் தலைமையகத்திலிருந்து இரண்டு புளூம்பெர்க் பத்திரிகையாளர்கள் கோல குபு பாரு தேர்தலின் நிலைமை குறித்து கருத்துகளைப் பெற என்னைச் சந்திக்க வந்தனர்.

ஒற்றுமை அரசாங்கம் மேலும் மேலும் பலவீனமடைந்து வருவது அனைத்துலக சமூகத்திற்கும் தெரிய வந்துள்ளது  என்பதை நான் புரிந்து கொள்கிறேன் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset