செய்திகள் மலேசியா
கோலகுபு பாரு இடைத்தேர்தல் முன்கூட்டியே வாக்குப்பதிவு: கள நிலவரங்களைப் பார்வையிட்ட இரு வேட்பாளர்கள்
கோலாலம்பூர்:
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்கூட்டியே வாக்குப்பதிவு காலையில் தொடங்கிய நிலையில் காவல்துறை அதிகாரிகளும் ராணுவ அதிகாரிகளும் தத்தம் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சொக் தவ், தேசிய கூட்டணி வேட்பாள்ர் கைருல் அனுவார் சவுத் ஆகிய இருவரும் காலையிலேயே வாக்கு மையத்திற்கு வருகை புரிந்து வாக்குப்பதிவு நிலவரங்களை பார்வையிட்டனர்.
முன்கூட்டியே வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்று வருவதால் தாம் பெரும் மனநிறைவு கொள்வதாக செய்தியாளர்களிடம் தேசிய கூட்டணி வேட்பாளர் கைருல் அனுவார் சவுத் தெரிவித்தார்.
இதுவரை 24 விழுக்காடு வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
எதிர்வரும் மே 11ஆம் தேதி கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 7:23 pm
துப்பாக்கி தோட்டாவுடன் திரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்
May 19, 2024, 5:53 pm
பேரின்பம் மலேசியா இயக்கம் மீண்டும் புத்துயிருடன் செயல்படும்: தாமோதரன்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm