நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, இலக்கவியல் பயன்பாடு குறித்து பிரதமர் விளக்கமளிப்பார் 

புத்ராஜெயா: 

அரசாங்கத்தில் இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விளக்கமளிக்கவுள்ளார். 

அரசாங்கத்தின்  இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மறைமுகமாக முதலீட்டாளர்கள் மலேசியாவிற்கு வருவதற்கு உதவுகின்றது என்று பிரதமர் கூறினார்.

இதற்கு முன்னர் தனது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயனத்தின் போது முதலீட்டாளர் நிறுவனத்தாலும் இந்த உறுதிமொழி கோரப்பட்டதாக அவர் விளக்கினார்.

முதலீட்டாளர் நிறுவனத்துடனும் மிடா, மாட்ரேட், எரிசக்தி அமைச்சகத்துடன் நீண்ட நேரம் விவாதித்ததாகவும் அவர் தெரிவித்தார். 

அவர்கள் தன்னிடம் 'மூன்றாம் தரப்பு அணுகல்', மைக்ரோசாப்ட், 'கிளவுட் கம்ப்யூட்டிங்' போன்ற சிக்கல்கள் குறித்து கேள்விகள் எழுப்பியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.  

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset