நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கே.கே.பி. இடைத்தேர்தலில் வாக்கு செலுத்தவில்லை என்றால் ஹராமாகும்: பாஸ் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை 

கோலாலம்பூர்: 

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க முன்வரவில்லை என்றால் அது ஹராமாகும் என்று பாஸ் கட்சியின் தலைனை செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹசான் கூறினார். 

நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்த பாஸ் கட்சி உறுப்பினர்கள் முன்வந்து தங்களின் ஜனநாயக கடமையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய கூட்டணியைச் சேர்ந்த கைருல் அனுவார் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங்  சொக் தவ்வை எதிர்கொள்கிறார். மேலும் இரு வேட்பாளர்களும் இதில் களம் காண்கின்றனர்.

மே 11ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டியே வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset