நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கே.கே.பி தேர்தல் பரப்புரைக்காக மத்திய அரசாங்கத்தின் நிதியில் முறைகேடு நிகழவில்லை: மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் 

பெட்டாலிங் ஜெயா: 

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் மத்திய அரசாங்கத்தின் நிதி முறைகேடாக தேர்தல் பரப்புரைக்காக பயன்படுத்தப்பட்டதாக வெளிவந்த தகவலை மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மறுத்துள்ளார்.

எதிர்கட்சி தரப்பு முன்வைக்கும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை எதுவும் இல்லை என்று நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளருமான அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய அரசாங்கத்தின் நிதியை ஒற்றுமை அரசாங்கம் தவறாக பயன்படுத்துவதாக பாஸ் கட்சியைச் சேர்ந்த தக்கியுடின் ஹசான் கூறிய கருத்து தொடர்பில் அமைச்சர் ஸ்டீவன் சிம் பதிலளித்தார். 

மேலும், நம்பிக்கை கூட்டணி வெற்றிப்பெற்றால் அவர்களுக்கு எதிராக தேர்தல் ஆட்சேப மனு செய்யப்படும் என்று தக்கியுடின் சொன்னார். அதற்கு, எந்த கட்சிக்கும் தேர்தல் ஆட்சேப மனுவை மேற்கொள்ள உரிமை உண்டு என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset