நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எதிர்கட்சியினருக்குப் பொருளாதார விரிவுரை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது: பிரதமர் அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்: 

பொருளாதாரம் குறித்து எதிர்கட்சி தரப்பு தவறான தகவல்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனை களையும் விதமாக எதிர்கட்சி தரப்புக்கு அரசாங்கம் பொருளாதார விரிவுரை வழங்க தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தையும் அரசு ஊழியர்களின் நலன்களையும் அரசாங்கம் துரித நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் எதிர்கட்சி தரப்பு மடானி அரசாங்கத்திற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். 

எதிர்கட்சிகளின் வசதிக்காகவும் பொருளாதார தகவலை கொண்டு சேர்க்கவும் தாமும் இரண்டாவது நிதியமைச்சர் அமீர். ஹம்சாவுடன் இணைந்து இந்த பொருளாதார விரிவுரையை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்கட்சி தரப்பு பொருளாதார விவகாரத்தில் குழப்பமான மனநிலையைக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் சாடினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset